Thursday, July 7, 2011

இதிகாசங்கள் பிராமணர்களின் சதியா...?

இதிகாசம் என்ற வார்த்தையை நேரிடையாக தமிழில் மொழி பெயர்த்தால் நடந்த சரித்திரம் என்று சொல்ல வேண்டும்.
பொதுவாக இதிகாசங்கள் என்பது நமது இந்தியாவை பொறுத்த வரை இராமாயணம், மகாபாரதம் ஆகிய மாபெரும் காவியங்களை மட்டுமே குறிக்கும்.
இன்று ராமாயணம் நடந்ததா மகாபாரதம் நடந்திருக்க முடியுமா? என்ற வாத விவாதங்கள் சூடாகவே நடக்கிறது.
சேது சமுத்திர திட்டம், ஆதம் பாலம் என்ற இராமர் பாலத்தை இடித்து தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலை வந்த போதே இதிகாசங்களை பற்றிய சர்ச்சைகள் அதிகரிக்க துவங்கிவிட்டது.
ராமாயணமும் மகாபாரதமும் வரவலாற்று நிகழ்வுகளே என்று ஒரு சாராரும், நிகழ்வுகளும் அல்ல, நிகழ்ச்சிகளும் அல்ல பார்ப்பனர்கள் கட்டி வைத்த கட்டுக்கதையே அவைகள் என வேறொரு சாராரும், லாவணி பாட ஆரமித்து விட்டார்கள்.
இதில் எது சரி, எது தவறு என்ற விவாதம் இப்பொழுது நமக்கு தேவையில்லை.
ஆனால் இந்த இரண்டு காவியங்களுக்கு இணையான காவியங்கள் உலகத்தில் இன்று வரை தோன்றவில்லை எனும் போது வரலாற்று சான்றுகளுக்காக மூக்கை உடைத்து கொள்வது, சிலையின் அழகை ரசிப்பதை விட்டுவிட்டு உளியின் தரத்தை எடை போடுவதற்கு ஒப்பாகும்.
இந்திய இலக்கியங்கள் எல்லாமே ஒரு வகையில் வேதங்களுக்கு விளக்கம் சொல்வதற்காகவோ அல்லது அவைகளை எதிர்ப்பதற்காகவோ உருவானவைகள் தான்.
இந்த இதிகாசங்களும் வேத இலக்கியம் பாமரனுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக எழுந்தவைகளே ஆகும்.
மக்களை நல்வழிப்படுத்துவதற்காக ஒழுக்கத்தின் உயர்வை சாதாரணமாக எல்லோரும் விளங்கி கொள்ள வேண்டும். என்பதற்காக உருவானவைகளே ராமாயணமும் மகாபாரதமும் ஆகும்.
வால்மிகியால் எழுதப்பட்ட இராமாயணம், லட்சிய புருஷனான ராமனது உயர்ந்த சரீதத்தை சொல்லுகிறது.
ஒரு மனிதன் தன்னை விட உயர்ந்தவர்களிடத்தில் எப்படி பழக வேண்டும்.
சமமானவர்களோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும்,
குறைந்தவர்களை எப்படி நடத்த வேண்டும்,
ஒரு நாட்டை ஆள்வது எப்படி, நல்லாட்சிக்கும், வல்லாட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்ன
ஒரு சமுதாயம் அமைதியாக வாழ என்ன செய்ய வேண்டும். எதை செய்ய கூடாது என்பன போன்ற புறம் சார்ந்த விஷயங்களையும்
அன்பு என்றால் என்ன, விசுவாசம் என்றால் என்ன, ஒழுக்கம் என்றால் என்ன என்பன போன்ற அகம் சார்ந்த விஷயங்களையும் ராமாயணம் மிக விரிவாக பேசுகிறது.
இன்றைய பகுத்தறிவு வாதிகளால் அறிவு வளராத காலம் என்று சொல்லப்படும் ஆதிகாலத்திலேயே இன்றைய வாழ்க்கை இப்படி தான் இருக்க வேண்டுமென வாழ்க்கை சவால்களை இப்படி தான் சமாளிக்க வேண்டுமெனவும் ஒரு தனி மனிதன் சிந்தித்து அற்புத படைப்பை உருவாக்கியிருக்கிறான் என்றால் அவன் புத்திசாலியா? அவனிடம் குறை காணும் இவன் புத்திசாலியா? என்று நமக்கு கேட்க தோன்றுகிறது.
ராமாயணம் சம்பந்தமேயில்லாத இருவருக்கிடையில் நடைபெறும் போரை பற்றி பேசுகிறது என்றால் மகாபாரகம் ரத்த சம்பந்தம் உள்ள பங்காளிகளின் போரை பற்றி பேசுகிறது.
ராவணன் காமத்தின் வடிவம், துரியோதனன் பேராசையின் வடிவம்,
இப்படி நடந்து தான் தர்மத்தை காக்க வேண்டும் என்பது ராமனின் சித்தாந்தம்.
எப்படி நடந்தாவது தர்மத்தை காக்க வேண்டும் என்பது கிருஷ்ணனின் தத்துவம்.
ராமாயணமும், மகாபாரதமும் பிராமணர்களின் சதிக் காவியங்கள் என வாதிடுபவர்கள் ஒரு விஷயத்தை சிந்தித்து பார்க்க வேண்டும்.
பிராமணர்களின் உயர்வை பற்றி பிராமணீயத்தின் சிறப்பபைப் பற்றி பிரச்சாரப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் முக்கியமென்றால் இதிகாச கதாநாயகர்கள் அனைவரும் பிராமணர்களாகவே இருந்திருக்க வேண்டும்
ஆனால் ராமனே சத்ரியன், கிருஷ்ணனோ தாழ்ந்த ஜாதியென்று சொல்லப்படும் யாதவ குலத்தை சேர்ந்தவன்.
ஆனால் கெட்டவனாகவும், வில்லனாகவும் காட்டப்படும் ராவணன் சுத்தமான பிராமணன்.
இதை உணர்ந்தால் இதிகாசங்களின் மீது வெறுப்பு வராது இந்துக்களிடம் பிளவை ஏற்படுத்தவே பிராமணர் பிராமணர் அல்லாதவர் என்ற கதைகள் விஞ்ஞான பூர்வமாக சிருஷ்டித்து உலவவிடப் பட்டிருக்கிறது இதை உணர்ந்தால் பல உண்மைகளை அறியலாம்
Continue reading →

சித்திக் இயக்கத்தில் விஜய்

சித்திக் இயக்கத்தில் விஜய் நடித்த பிரெண்ட்ஸ் படம் அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இருவரும் காவலன் படத்தில் இணைந்தனர். இப்படமும் நன்றாகப் போனதால், மீண்டும் ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள்.
மலையாளத்தில் ஏற்கனவே இயக்கிய கதையை விஜய்க்காக சில மாற்றங்களை செய்து தமிழில் எடுக்க இருக்கிறார் சித்திக்.என்று கூரப்பட்தது ஆனால் சித்திக் ஹிந்தில் காவலன் படத்தை  ரீமேக் செய்கிறார் .இதம் பட பிடிப்பு முடிந்ததும்.விஜய்காக ஒரு கதையை தயார் செய்து வைத்துள்ளதாகவும்.காவலன் படம்  ஹிந்தி  ரீமேக் முடிந்ததும்.
அந்த கதைக்கு  ஸ்க்ரீன்ப்ளே அமைத்தும்.படம் துவங்க படும் என்று சித்திக் தெரிவித்து  உள்ளார் .இந்த படமும் காமடி படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
Continue reading →

காந்தி ஜெயந்தி அன்று பகலவன்

விஜயின்  அடுத்த படம்   பகலவன் என உறதி செய்யபடுள்ளது.மேலும்  இதி உறுதி படுத்தும் விதமாக பகலவன் படம் வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி  காந்தி ஜெயந்தி அன்று படம் தொடங்கப்படும்.இதற்கான அறிவிப்பு  வேலாயுதம்   படத்தின் பாடல் வெளியிட்டின் பொது  அறிவிக்கப்படும்  என்று  விஜய் மற்றும்  சீமான் தரப்பு தெரிவித்துள்ளது .இந்த படத்தின் நாயகி பாவனா மற்றும் பாலிவுட் நாயகி ஒருவர் நடிக்கலாம் என கூறபடுகிறது.
Continue reading →
Continue reading →

Wednesday, July 6, 2011

விஜய் நடிக்கும் 24 +24 +3

விஜய் தற்போது நடித்து வரும் படங்களை முடித்ததும் 3 படங்களில் நடிக்க  இருக்கிறார்.அதில் ஒன்று யாவரும்நலம்  படத்தை இயக்கிய விக்ரம்.k குமார்  படம் .இந்த படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்க இருக்கிறார். அதில் ஒன்று ஆராச்சியாளர்   வேடம் . இந்த படத்தின் கதை வெளிவந்து  உள்ளது.மேலும் இந்த படத்திற்கான தலைப்பு 24   வெளிவந்து  உள்ளது.இந்த தலைப்பு வர கரணம் இந்த படத்தின் இறுதி காட்சி 24 மணிநேரத்தில் நடப்பது போலவும்.இந்த 3 கதாபாத்திரங்களும் 24 என்ற ஒன்றை அடயா முயற்சிபதும் அதில் யார் வெற்றி அடைகிறார்  என்பதுதான் கதை.விஜய்யை  கவர்ந்ததும் இந்த இறுதி கட்சிதானம் .
Continue reading →

விஜய் விக்ரம் மணிரத்னம் சேரும் மாஸ் படம்


மணிரத்னம் விஜயை வைத்து பொன்னியின் செல்வன் படத்தை பண்ணுவதாக இருந்தது.அது ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு விஜய் கொடுத்த கால்ஷீட் ஐ வீணாக்காமல்.விஜயை வைத்து ஒரு மாஸ் படத்தை இயக்க ஒரு கதை ஒன்றை உருவாக்கி உள்ளார்.இந்த படம் இரண்டு நாயகர்கள் கொண்ட கதை என்பதல் இதில் விஜய் உடன் விக்ரம் நடிப்பர் என தெரிகிறது.இந்த படம் மணிரத்தினத்தின் அக்னி நச்சத்திரம்,தளபதி, போன்ற ஹிட் படங்களின் வரிசையில் இடம் பெரும் என கருத படுகிறது.                                                            
Continue reading →

நட்பிற்காக ஆடிய விஜய்

..

அஜீத் நடிப்பில் உருவாகி வரும் அவரது 50வது படமான மங்காத்தாவில் கெஸ்ட் ரோலில் விஜய் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் உண்மை தான்.ஆனால் பட காட்சியல் நடிக்கவில்லை.ஒரு பாடல் கட்சிக்கு மட்டும் வருகிறார்.இந்த பாடல் கிளைமாக்ஸ் கட்சிக்கு முன் வருகிறது இந்த பாடல் முழுவதும் விஜய் வருவாராம்.இந்த பாடலில்  அஜித்,விஜய் ,அர்ஜூன் ஆடுகின்றனர்.விஜய் அஜித் மற்றும் வெங்கட்பிரபு கேட்டு கொண்டதல் இன்ட பாடலில் விஜய் ஆடிஉள்ளர்.
Continue reading →

விஜய் இன் அடுத்த படம் பகலவன்

விஜய் தற்போது நடித்து வரும்  வேலாயுதம்  படம் இறுதி  கட்டத்தை அடைந்து  விட்டது.நண்பன் படத்தின் வேலைகளும்  60% முடிந்து விட்டது.விஜய் இன் அடுத்த படம்  என்ன இதான் கேள்வி கோலி வூட் முழுவதும். விஜய் முருகதாஸ் படத்தில் நடிக்க போகிறார்,கவுதம் படத்தில் நடிக்க போகிறார் என பேச பட்டது.இதற்கு கரணம்  உண்டு ஆம் தன்னிடம்  மிக முக்கியமான கதைகளை கொண்டு வந்த ஹரி,முருகதாஸ்,கே.வி.ஆனந்,கவுதம் போன்ற இயக்குனர்களை ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய்.தற்போது அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்து விருந்தும் அளித்தாராம்.மேலும் இவர்களிடம் தனக்கு ஒரு கதை தயார் செயுமாறு கேடு உள்ளார்.இது தான் மேற்படியான கேள்விகு கரணம் .ஆனால் தற்போது இதற்கு பதில் கிடைத்து  விட்டது.விஜய் இன் அடுத்த படம் பகலவன் தான் இதற்காக விஜய் தற்போது உடற்பயற்சி செய்கிறார் . பகலவன் படத்தில் போலீஸ் வேடம்  என்பதல் விரைவில்  விஜயை சிக்ஸ் பேக் உடன்  காணலாம் .
Continue reading →

Tuesday, June 28, 2011


இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

by:- IHAN
Continue reading →

Thursday, June 23, 2011

பழைய காதலியின் புகைப்படம்

பழைய புத்தகங்களின் நடுப்பக்கத்திலோ
பழைய டைரிகளின் அடிப்பக்கத்திலோ
பழைய மணிபர்ஸின் உள்பக்கத்திலோ
ஒளிந்திருக்கலாம் உங்கள் பழைய காதலியின் புகைப்படம்..

அடம்பிடித்து அவளிடம் வாங்கிக்கொண்ட
அந்தப்புகைப்படம் அப்போதைய உங்கள்
அன்றாட வஸ்துவாய் இருந்திருக்கும்..

உங்களுக்காக பிரயத்தனப்பட்டு அவள்
எடுத்துக்கொண்ட அந்தப்புகைப்படத்தில்
திணறும் சிரிப்பொன்றை செயற்கையாய் உதிர்த்திருக்கிறாள் அவள்

அந்தப்புகைப்படத்தை உங்கள் விரல்கள் தொட்டதைவிட
உங்கள் இதழ்கள்தான் அதிகம் தொட்டிருக்கும்..

தூங்கும்போதும் விழிக்கும்போதும்
நடக்கும்போதும் இருக்கும்போதும்
அழுதபோதும் தனித்தபோதும்
அதுவே உங்கள் ஆறுதல் சாதனம்..

அவளுடன் நேரில் பேச முடியாததையெல்லாம்
கொட்டித்தீர்த்தீர்கள்
செல்லமாய் திட்டி
செல்லமாய் முறைத்து
செல்லமாய் கொஞ்சி
செல்லமாய் மிஞ்சி..

சிலர் எரித்துவிட்டாலும்
சிலர் திருப்பிக்கொடுத்திருந்தாலும்
அணைந்து விடாத வேள்வியாய்
அவரவர் மனங்களில்
அது கனன்று கொண்டிருப்பது திண்ணம்..

காதலில் களித்தபோதும்
காதல் பிரிவில் தவிக்கும்போதும்
சுதந்திரமாய் எடுத்துப்பார்க்க முடிவதில்லை
அவள் புகைப்படத்தை..
எல்லோரும் தூங்கிய பின்னிரவில்
காதல் பிரிவின் சடுதியான கண்ணீரில்
அடிக்கடி நனையலாம் அந்தப்புகைப்படம்..

இப்போது ஒரு முறை
அதில் அவளது கண்களைப்பாருங்கள்
அதில் நிரம்பிவழியும் காதலை
இனி யாராலும் உங்களுக்குத்தர முடியாது..

-நிந்தவூர் ஷிப்லி-




மேலும் வாசிக்க இதனை Click

உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...

Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog