Friday, January 28, 2011

மதுவின் மயக்கத்தில் மிதந்த மாப்பிளை - கலியாணம் நிறுத்தப்பட்டது

மதுவின் மயக்கத்தில் மிதந்த மாப்பிளை - கலியாணம் நிறுத்தப்பட்டது"தென்மராட்சிப் பகுதியில் வித்தியாசமான முறையில் கலியாணம் ஒன்று நிறுத்தப்பட்டது.

தென்மராட்சிப்
பகுதியில் கடந்த 19ம் திகதி நடைபெற இருந்த கல்யாண நிகழ்வு ஒன்று
பிற்போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மாப்பிளை மது மயக்கத்தில் இருந்ததே
ஆகும்.

கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில்  உதவி
முகாமையாளராக  வேலை செய்யும் 29 வயதுடைய நபர்
ஒருவருக்கு தென்மராட்சிப் பகுதியில் உள்ள பெண் ஒருவரை பேசி
நிச்சயப்படுத்தி இருந்தார்கள். மாப்பிளையின் சொந்த இடமும்
தென்மராட்சி என தெரியவருகின்றது.  பெண் மற்றும் மாப்பிளை
இருவரும் பட்டதாரிகள். இவர்களுக்கு 19ம் திகதி திருமணம் செய்வதாக
நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த 17ம் திகதி பொன்னுருக்கும் 19ம்
திகதி கல்யாணமும் என தீர்மாணித்திருந்தார்கள். 17ம் திகதி பொன்னுருக்கு
செய்வதற்காக பொம்பிளை வீட்டில் இருந்து காலை8.30 மணிக்கு மாப்பிளை
வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். அத்துடன் பொன்னை உருக்குவதற்கு
ஆசாரியும் வந்திருந்தார். அனால் முக்கியமான கதாநாயகன் அங்கு
பிரசன்னமாகவில்லை. அத்துடன் மாப்பிளை வீட்டாரும் பதற்றத்துடன்
காணப்பட்டுள்ளார்கள்.

அவர்களை பெண் வீட்டார் விசாரித்த போது மாப்பிளை
இன்னும் கொழுப்பால் வரவில்லை என கூறப்பட்டது. இதனால் பெண் வீட்டார்
அதிர்ச்சி அடைந்த நிலையில் பகல் 12 மணிவரை காத்திருந்து தமது வீட்டுக்கு
சென்று விட்டனர்.

அதே நேரம் மாப்பிளையை தந்தை மற்றும் சகோதரங்கள் கைத்
தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முற்பட்டும் தொலைபேசி ஒன் லைன் ஆக
இருந்தும் மாப்பிளை பதிலளிக்கவில்லை. உடனடியாக தந்தையும் மாப்பிளையின்
மாமனாரும் கொழும்பு விரைந்தார்கள்.

இதே நேரம் மாலை 1 மணியளவில் மாப்பிளை
தொலைபேசியில் வீட்டாருடன் கதைத்துள்ளார்.  நான் இப்போ
அனுராதபுரத்திற்கு கிட்ட  வந்துகொண்டிருக்கின்றேன்.
அனைவரையும் நிற்கச் சொல்லுங்கள் 6 மணிக்குள் வந்துவிடுவேன். நடந்த
பிரச்சனையை நேரில் சொல்கின்றேன் என கூறியுள்ளார்.

இத் தகவல் தகப்பனிற்கு ம் கூறப்பட்டது. உடனடியாக
தகப்பனன் மற்றும் மாமன் வவுனியாவில் இறங்கி மாப்பிளைக்காக
காத்திருந்தார்கள்.

இதே நேரம் பெண்ணுடன் தொபேசி மூலம் மாப்பிளை பலதடைவைகள்
கதைத்திருந்தார். கதைக்கும் போது நான் எனது
நண்பர்களுக்கு பேர்ச்சுளர் (Bachelor) பார்ட்டி கொடுத்துவிட்டுதான்
பொன்னுருக்குக்கு வருவேன் என்ற தகவலும் கூறியுள்ளார்.
இதுவும் மாப்பிளையின் தகப்பன் காதுக்கு சென்றடைந்தது.

வவுனியாவில் தனி வாகனத்தில் வந்த மாப்பிளை தனது தகப்பன்
மற்றும் மாமன் ஆகியோரை வாகனத்தில் ஏறச் சொல்ல ஏன் வரவில்லை என்ற
காரணத்தைச் சொல்லு. இல்லாவிடில் யாழப்பாணத்துக்கு வர வேண்டாம் திரும்பி
கொழும்பு செல் என தகப்பனால் கூறப்பட்டுள்ளது. 

தனது நண்பர்களுக்கு தான் பார்ட்டி வைத்ததாகவும் இரவு
யாழ் வருவதற்கு பஸ் புக் பண்ணி விட்டு மாலை 4 மணியளவில் தனது
நண்பர்களுக்கு பார்ட்டி வைத்த போது தனக்குக்கும் குளிர்பாணத்துடன்
தெரியாது மது கலந்து தந்துவிட்டார்கள். அதனால் என்னால் இரவு பஸ்சில்
வரமுடியாது தூங்கிவிட்டேன் என்று மாப்பிளை கூறியுள்ளார். உடனே அந்த
இடத்தில் வைத்து மகனை தந்தை அனைவரும் பார்க்க அடித்துள்ளார்.

உடனடியாக வாகனத்தில் ஏறி பெண் வீட்டாரிடம் சென்று
நிலமையை தகப்பன் மற்றும் மாப்பிளை ஆகியோர் கூறியுள்ளனர். அதை
ஒத்துக்கொள்ளாத பெண்ணின் தந்தை பின்னர் யோசித்து பதில் சொல்கின்றோம்
என கூறி இவர்களை வழி அனுப்பியுள்ளர். 

 பெண்ணுடன் பின்னர் மாப்பிளை தொலைபேசியில்
உரையாடி நிலமையை தற்போது சுமூகமாக கொண்டுவந்துள்ளார். பல்கலைக்கழகத்தில்
படித்த பெண் என்றபடியால் புரிந்துணர்வு அடிப்படையில் பெண் தனது தந்தைக்கு
நிலமையைக் கூறி வரும் வைகாசி மாதத்திற்கு திருமணத்தை
நிச்சயப்படுத்தியுள்ளார்.

Continue reading →

மணலிலும் கலை வண்ணம் படைக்கலாம்!


மணலில் சிற்பங்களை தயாரிக்க வல்ல சர்வதேச சிற்பிகள் குழு ஆஸ்திரேலியாவின் பிரதான கடற்கரை வீதி ஒன்றில் மணல் சிற்ப கண்காட்சி ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் நடத்தியது.

உலகம் பூராவும் இருந்து சிற்பிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

வண்டுகள், மூட்டைப் பூச்சிகள், சிலந்திகள், வண்ணாத்துப் பூச்சிகள், தேள்கள் போன்ற ஜந்துகளின் உருவங்களை மணலில் சிற்பங்கள் ஆக்கினர். இவை பார்வையாளர்களின் கண்களுக்கு பெருவிருந்து ஆகின.





Continue reading →

Wednesday, January 26, 2011

சோபா கதிரைகளின் பஞ்சை சாப்பிடும் விநோத பெண்....



அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் சோபா கதிரைகளின் பஞ்சைச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டு உள்ளார்.

இவரின் பெயர் Adele. வயது 30.

இவருக்கு 10 வயது ஆனபோது பெற்றோர் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர்.

அக்கால கட்டத்தில்தான் இப்பழக்கத்துக்கு உட்பட்டார்.

இவரது கைப்பையில் எப்போதுமே சோபா கதிரைகளின் பஞ்சு இருக்கும்.

இது வரை காலமும் 90 கிலோ கிராம் பஞ்சை சாப்பிட்டு இருக்கின்றார்.

இவர் சோபா கதிரைகளின் பஞ்சை உண்கின்ற பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார் என்று விளக்கம் தருகின்றனர் உளவியல் அறிஞர்கள்.

Video

Continue reading →

Tuesday, January 25, 2011

கண்ட கண்ட இடங்களில் பாலியல் இன்பம் ....



பொது இடம் ஒன்றில் சில ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்திருந்து பாலியல்
இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர். அதுவும் பண்பாட்டின் உறைவிடமாக
விளங்குகின்ற யாழ் மண்ணில்தான் என்றால் நம்புவீர்களா?


எமது சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து அதிகம்
பேசப்பட்டு வருகிறது. பருவ உணர்ச்சிகளால் சிற்றின்பத்திற்கு அடிமைப்பட்டுத்
தமது எதிர்காலத்தையே அழித்துக்கொண்ட, கொண்டுவரும் பல பெண்கள் நம்மத்தியில்
இருக்கிறார்கள். இதனால், எமது சமூகத்தில் அவர்கள் குறித்த தப்பான
கண்ணோட்டம் அவர்கள் மேல் விழுவதற்கு ஏதுவாகியுள்ளது
வெட்கம், மானம், கற்பு, பயம், ஒழுக்கம் எல்லாவற்றையும் புறமொதுக்கிவிட்டு, கண்டகண்ட இடங்களிலெல்லாம் காமநுகர்ச்சியில் ஈடுபடும் சம்பவங்கள் யாழ் குடாநாட்டில்
சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. அப்படியான பல நிகழ்வுகளின் வரிசையில் பலரது
கவனத்தையும் ஈர்த்த சம்பவம் ஒன்று அதிக கவனிப்பைப் பெற்றுள்ளது. அப்படி
பொது இடம் ஒன்றில் சில ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்திருந்து பாலியல்
இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர். அதுவும் பண்பாட்டின் உறைவிடமாக
விளங்குகின்ற யாழ் மண்ணில்தான் என்றால் நம்புவீர்களா?

பாலியல் உறவு
என்பது நான்கு சுவர்களுக்குள் நடக்கும் அந்தரங்கமான உறவை பொதுஇடங்களில்
அரங்கேற்றுவது நாய்களும் மனிதர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை
என்பதையே காட்டுகின்றது.அண்மையில் யாழ் கோட்டைப்பகுதியில் நடந்த
சம்பவம் இதனை மெய்ப்பிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக எனது நண்பர் கூறியவற்றை
அப்படியே உங்களுக்கு ஒப்புவிக்கிறேன். பொழுதுசாயும் அந்தி மாலைவேளை. ஆதவன்
தன் கடமை முடித்துவிட்டு மேற்திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அவனது
பொன்னிற நீண்ட கதிர்கள் கோட்டையின் மேற்புறத்தைப் பிரகாசமாக்கிக்
கொண்டிருந்தன.


அவ்வேளை, சன நடமாட்டம் சற்றே குறைந்திருந்தது. ஆட்டோ
ஒன்றில் வந்திறங்கிய மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாக கோட்டைப்
பகுதியிலுள்ள மறைவிடம் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். இக்காட்சியை அவதானித்த
அப்பகுதியில் எங்கோ ஓரிடத்தில் நின்ற இளைஞர்கள் சிலர் தமது ஆராய்ச்சியில்
இறங்கினார்கள். சிறிதுநேரம் கழித்து அங்கே என்ன நடக்கிறது என அறிவதற்கு
தமது வேட்டையை ஆரம்பித்தனர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை
அதிர்ச்சியில் உறையவைத்தது. பற்றை மறைவில் உள்ள இடமொன்றில் ஒன்றாகச்
சேர்ந்து தமது காதல் திருவிளையாடல்களை நிகழ்த்தியபடியிருந்தனர். அந்த
மூன்று பெண்களின் உடல்களிலும் அரைகுறை ஆடைகளுடன் அரை நிர்வாண கோலத்தில்
தம்முடன் கூடவந்த இரு இளைஞர்களுடன் காம வேட்கையில் லயித்திருந்தனர். தம்மை
பிறர் கண்காணிப்பார்கள் என்பது பற்றியெல்லாம் அவ் இள நங்கையர்கள்
கிஞ்சித்தும் சிந்தித்தாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் இப்படியெல்லாம்
நடந்திருக்க மாட்டார்கள்.

காமம் தந்த போதையின் கிறக்கம் அவர்களது கண்களை
மறைத்தது. அடுத்து அங்கு நடைபெற்ற காட்சி இரத்தத்தையே உறைய வைப்பது போல்
இருந்தது. அந்த இளைஞர்கள் அவ்விடத்தை நெருங்கியதும் மரம்
ஒன்றிலிருந்து கீழே ஒருவர் குதித்தார். அவர் கையில் கமரா போன் இருந்தது.
அங்கு நடைபெற்ற அலங்கோலக் காட்சிகளை அப்படியே தமது கமராவுக்கள்
சிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவ்விடத்தை நெருங்கிய இளைஞர்களின்
ஆரவாரங்கள் காதல் வெள்ளத்தில் திளைத்திருந்தவர்களை மிரள வைத்தது. அவர்களால்
என்ன செய்யமுடியும்? அங்கு அரங்கேறிய காட்சிகளை அப்படியே அந்த மர்ம நபர்
கமரா போனுக்குள் பதிவுசெய்து வைத்திருந்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த
அந்தப் பெண்கள் அவரின் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி அந்த அலங்கோலக்
காட்சிகளை அழித்துவிடுமாறு கோரி அழுது புரண்டனர்.

என்ன செய்வது
‘ஆப்பிழுத்த குரங்கின்' கதைபோல அப்பெண்களின் நிலை. இனி இவர்களின் எதிர்கால
நிலை பரிதாபத்திற்குரியதொன்றாகவே இருக்கப்போகின்றது என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.

இப்படியான சொல்வதற்கே நாக்குக் கூசும்
அளவிற்குப் பல சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் அரங்கேறியபடி தான்
இருக்கின்றன. தற்போதைய புறச்சூழலைப் பயன்படுத்தி பல இடங்களிலும்
முளைத்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் ஆட்களற்ற வீடுகள் முதலியன இவ்வாறான
சம்பவங்களுக்குத் தீனிபோடுகின்றன. அத்துடன், இணையத்தள வசதிகள் மற்றும்
எல்லை மீறிய கைத்தொலைபேசிப் பாவனைகளும் இதற்கு தூபமிடுகின்றன. வீடியோ கமரா
வசதிகள் கொண்ட பலவேறு விதங்களில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு
புழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் முறைகள்
இளவயதினரிடையே மேலோங்கிக் காணப்படுகின்றன.

இக் கைத்தொலைபேசிகளில்
ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து ரசிக்கும் கலாசாரம் தலைதூக்கியுள்ளது.
இக் கலாசாரத்திற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக, பாடசாலை
மாணவிகளும் இத்தகைய கலாசாரத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

இதனால்,
பல பெண்பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் எனது நண்பர் கூறிய விடயம் என் மனதை துணுக்குறச் செய்தது.

யாழ்
நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்விபயிலும்
மாணவிகள் பலர் தம் வயிற்றில் கருவைத்தாங்கி வேதனைச் சூழலில் சிக்கி
வருந்துவதாக கூறிக் கவலைப்பட்டார்.

கருவை அழிக்கமுடியாது எனவும்
மீறி அழித்தால் மாணவிகளின் உயிருக்கே உலைவைப்பதாக முடியும் எனவும் குறித்த
வைத்தியர் தரப்பால் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு
எச்சரிக்கப்பட்டதாகவும் அறியமுடிந்தது.

பெண்பிள்ளைகள் விடயத்தில்
பெற்றோர் அசட்டையீனமாக இருக்கின்றமையாலேயே இத்தகைய கீழ்த்தரமான சம்பவங்கள்
எம் மத்தியில் இடம்பெற வாய்ப்பாக அமைகின்றது. பெற்றோர் தமது பிள்ளைகளின்
ஒவ்வொரு செயற்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என
அறிவுத்தப்படுகின்றது.

எமது இனம் ஏனைய இடங்களிலிருந்து வேறுபட்டு
நிற்கிறது. காரணம் நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்ட
இனமாக சிறப்புற்றிருக்கிறது. அத்தோடு, ஏனைய இனக் கலாசாரங்களுடன்
ஒப்பிடுகையில் தனித்துவமான பண்பாட்டுப் பேணுகைளைக் கொண்டது.

இத்துணை
சிறப்புப்பெற்ற எம்மினத்தின் ஆணிவேரையும் பண்பாட்டின் அடையாளங்களையும்
அழியவிடுவது எம்மினத்திற்கு ஆரோக்கியமான தல்ல. எனவே இத்தகைய கலாசாரச்
சீர்கேடான சம்பவங்களைத் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது
அவசியமாகும். இதனால் ஓரளவிற்காவது எமது பண்பாட்டுக் கூறுகள் அழிய விடாது
தடுக்கலாம்.

நிற்க, தடம் மாறும் யாழ்ப்பாண கலாசாரம் என்ற பகுதி
எமது சமூக கலாசாரப் பிறழ்வான விடயங்களை அப்படியே வெளிச்சமாக்கிக் காட்டும்
பகுதியாகும். மேற்கொண்டு இவ்வாறான சம்பவங்களை இனிமேலும் இடம்பெறாமற்
தடுப்பதற்கே தவிர, யாருடைய மனங்களையும் புண்படுத்துவதற்காகவோ
வேதனைப்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதிஷ்டிரன்

நன்றி வீரகேசரி
Continue reading →

அப்டேட் வழியில் மோசமான வைரஸ்



மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, தன் தொகுப்புகளின் பிழைகளை நிவர்த்தி செய்திடும், பேட்ச் பைல்களை வெளியிடுகிறது.

இவை அப்டேட் பைல்கள் என அழைக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, பல சைபர் கிரிமினல்கள், வைரஸ்களைப் பரப்புகின்றனர்.

சென்ற மாதம், இதனைப் பயன்படுத்தி வைரஸ் ஒன்றினைப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இது தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் ஸ்டீவ் லிப்னர் (Steve Lipner) - உண்மையிலேயே அப்படி ஒருவர் இருக்கிறார் - பெயரில் ஒரு இமெயில் அனுப்பப்படுகிறது.

அதில், கம்ப்யூட்டரை வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, உடனடியாக இணைக்கப்பட்டுள்ள KB453396ENU.exe என்ற பைலை இன்ஸ்டால் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

உண்மையிலேயே அந்த பைல் தான் வைரஸ். இந்த வைரஸ், விரைவில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களுக்குப் பரவும் தன்மை உடையது. இதன் மூலம் பாட்நெட் என்று அழைக்கப்படும் மோசமான தன்மை உடைய வைரஸின் ஒரு பகுதியாக இது செயல்படும்.

பின்னர், அந்த பாட்நெட், இணைய தளங்கள், பெரிய நிறுவனங்களின் சர்வர்களில் பரவி தகவல்களைத் திருடும். பின்னர் இதே தகவல்கள் இந்த வைரஸை எழுதியவர்களால், குற்றவாளிகளுக்கு விற்பனை செய்யப்படும்.

இந்த வைரஸ் வரும் மின்னஞ்சலை உற்று நோக்கினால், அதில் பல விஷயங்கள் போலி என அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அப்டேட் பேட்ச் பைல், ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க்கிழமைதான் வெளியிடப்படும்.

இந்த அஞ்சல் எந்த நாளிலும் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரலாம். மெயிலின் வாசகமும், ஒரு பெரிய நிறுவனத்தின் ஸ்டைலில் இருக்காது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கொண்டவனின் வாசகமாக இருக்கும்.

மெயிலின் ரிப்ளை முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் என்ற சொல்லில் எழுத்துப் பிழை இருக்கும். எனவே இது போன்ற மெயில்களைப் பெறுகையில் கவனமாக இவற்றைப் பார்த்து எச்சரிக்கை கொள்ள வேண்டும்.
Share300
Continue reading →

Sunday, January 23, 2011

முத்தத்தின் அவசியம் குறித்த சில்லென்ற சில குறிப்புக்கள்!




ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது


*எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சமமாக முதுமையால் நமது முகத்தில் சுருக்கம் விழுவது குறையும் .

*காதலர்கள் இதழோடு இதழினைத்து முத்தமிடுகையில் பரிமாறிகொள்ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு , சில ஊட்டச்சத்துக்கள் , புரதம் என பல வித விடயங்களும் இருப்பதால் , அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது .

*66% பேர் முத்தமிடுகையில் முகத்தை மூடிக்கொள்கின்றனர் , மீதி பேர் மட்டுமே கண்களை திறந்த படி தனது பார்ட்னரை பார்த்த படி முத்தமிடுகின்றனர் .

*அமெரிக்க பெண்கள் தனது திருமணத்திற்கு முன் குறைந்தது 80 ஆண்களையாவது முத்தமிடுகின்றனர் என ஒரு ஆய்வு கூறுகிறது .

*உலகில் ஒரு மனிதன் தனது வாழ்நாளின் இருபதாயிரத்து நூற்றி அறுபது நிமிடங்கள் அதாவது இரண்டு வாரங்கள் முத்தமிடுவதில் கழிக்கிறான்.

*நம் உதடுகளின் SENSITIVITYயானது நம் விரல்களை விட 200 மடங்கு அதிகமானது .

*இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பார்த்து முடிக்கப்படும் திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டு கொளவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது .

*ஒரு முறை முத்தமிடுவதால் , 2-3 கலோரிகள் நம் உடலில் எரிக்கப்படுகிறது , அதுவே பிரெஞ்சு முத்தமாக இருக்கும் பட்சத்தில் 5 கலோரி அளவுக்கு சக்தி எரிக்கப்படுகிறது.

*வேலைக்கு செல்வதற்கு முன் தன் மனைவியை முத்தமிட்டு செல்பவர்கள் , அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக தனது தொழிலை மேற்கொள்கின்றனர்.

*மிக அதிக உணர்ச்சியுடன் 90 விநாடிகள் வரை முத்தமிட்டு கொள்பவர்களின் இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் மிக அதிக அளவிற்கு செல்வதால் அவர்களது வாழ்நாளில் ஒரு நிமிடம் குறைகிறது.

*எஸ்கிமோக்கள் மற்றும் மலேசியர்கள் தங்களது மூக்கால் முத்தமிட்டு கொள்கின்றனர் .

*முத்தமிடுதல் பெண்களின் மன அழுத்தத்தை பெருமளவில் குறைக்கிறது. , ஆண்களுக்கு மனஅழுத்தத்தை அதிகமாக்குகிறது.

*குண்டாயிருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் வரை முத்தமிடுவதால் தனது உடலின் 26 கலோரிகளை குறைக்க இயலும் . இதனால் தொப்பை குறைகிறதாம்.

*முத்தமிடுதல் மற்றும் முத்தம் குறித்த ஆராய்ச்சிக்கு PHILEMOTOLOGY என்று பெயர் .

*5 மில்லியன் பாக்டீரியாக்கள் முத்தமிடுகையில் பரிமாறப்படுகிறது. *ORBICULARIS ORIS எனபதே முத்த தசை ஆகும்.

*முத்தமிடுகையில் பெரும்பாலும் நாம் வலது புறமாகவே முத்தமிடுகிறோம் , ஏன் எனில் நமது மூளையில் நமது உணர்ச்சிகள் வலது பக்கமே கட்டுப்படுத்தப்படுகிறது.

*சினிமாவில் வெளியான முதல் முத்தகாட்சி 1896ல் வெளியான THE KISS திரைப்படத்தில் JOHN.C.RICE எனும் நடிகர் MAY IRWIN எனும் நடிகைக்கு கொடுத்ததேயாகும்.

*கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்ட மிக நீளமான முத்தம் 417 மணிநேரமாம்.

*இரவில் நாம் முத்தமிட நமது மூளையில் சில சிறப்பு நியுரான்கள் இருப்பாதலேயே நம்மால் இருட்டிலும் சரியாக முத்தமிட முடிகிறதாம்.

*முத்தமிடுவதால் எய்ட்ஸ் பரவுவதில்லை

*இங்கிலாந்தில் மட்டுமே ஜீலை 6 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய முத்த தினமாக கொண்டாடப்படடது .

*அத்தினமே பிற்காலத்தில் உலக முத்ததினமாக மாறியது

* முத்தம் குறித்த ஒரு பழமொழி - அணைப்பில்லா முத்தம் மணமில்லா பூ போன்றது
Continue reading →

Saturday, January 22, 2011

திரை அரங்கில் படம் பார்த்த நாய்கள்!


சுவீடன் நாட்டு திரை அரங்கு ஒன்று நாய்களுக்காக கதவுகளை திறந்து விட்டது. இந்நாட்டில் இவ்வருடம் செல்லப் பிராணிகள் கண்காட்சி இடம்பெற உள்ளது. செல்லப் பிராணிகள் கண்காட்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கும் வகையிலேயே இந்த ஏற்பாடு.

20th Century Fox Home Entertainment என்பது திரை அரங்கின் பெயர். இம்மாதத்தின் நான்கு நாட்களில் இவ்வாறு நாய்களுக்காக திரையரங்கில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. 200 எஜமானர்களும், 200 நாய்களும் திரைப்படம் பார்க்க வந்து இருந்தன.

நாய் ஒன்றின் சாகசங்களை வைத்து எடுக்கப்பட்ட Marmaduke என்கிற திரைப்படம் முதல் நாள் காண்பிக்கப்பட்டு இருக்கின்றது.
Continue reading →

உலகின் மிகச் சிறிய சப்பாத்து! ...





உலகின் மிகச் சிறிய அளவிலான ஒரு ஜோடி சப்பாத்தை பார்க்க ஆசையா?

பார்க்க விரும்பி இருந்தால் நீங்கள் கடந்த 20 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டுக்கு சென்று இருக்க வேண்டும். அங்கு ஒரு வித்தியாசமான கண்காட்சி இடம்பெற்றது. மிகச் சிறிய அளவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்துக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

34 ஜோடி சப்பாத்துக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் உலகின் மிகச் சிறிய சப்பாத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இம்மிகச் சிறிய சப்பாத்தின் நீளம் 3.8 மில்லி மீற்றர். அகலம் 1.8 மில்லி மீற்றர். உயரம் 2.2 மில்லி மீற்றர்.
Continue reading →

Thursday, January 20, 2011

Facebook துடுக்குகள்........


நண்பர்கள், உறவினர்கள் இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இன்று பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க்கிங் தளம் ஒரு இணைப்பு பாலமாக இயங்கி வருகிறது. பலர் தங்களுடைய போட்டோக்கள், அடுத்து கலந்து கொள்ளப்போகும் நிகழ்வுகள், குடும்பத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள், அனுபவங்கள், அன்றாட எண்ணங்கள் ஆகியவற்றை இதில் போட்டு வைக்கின்றனர். இவற்றை நண்பர்களும், உறவினர்களும் பார்த்து அறிந்து கொள்ள அனுமதியும் அளிக்கின்றனர்.

இந்த தகவல்களை எப்படி டவுண்லோட் செய்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் பேஸ்புக் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் லாக் ஆன் செய்து கொள்ளுங்கள். உள்ளே நுழைந்த பின்னர், Account என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Account Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Learn More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைப்பதில் கீழிருந்து இரண்டாவதாக உள்ள Download Your Information என்பதில் கிளிக்கிடவும். நீங்கள் எது குறித்து கிளிக் செய்கிறீர்கள் என்பது குறித்து சிறிய விளக்கம் ஒன்று தரப்படும். இங்கு Download என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.

இப்போது உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் திரட்டப்பட சிறிது நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பின்னர் நீங்கள் தந்துள்ள இமெயில் முகவரிக்கு, நீங்கள் விரும்பிய தகவல்கள் அடங்கிய சுருக்கப்பட்ட ஸிப் பைல், டவுண்லோட் செய்திடத் தயாராய் இருப்பதாக செய்தி கிடைக்கும். இங்கு கிளிக் செய்து, உங்கள் பாஸ்வேர்டை அடையாளம் உறுதி படுத்த பெறப்பட்ட பின், ஸிப் பைல் உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோட் ஆகும். படங்கள், போட்டோக்கள், பைல்கள் என அனைத்தும் சுருக்கப்பட்ட பைல் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடையும்
Continue reading →

இலங்கை 'பேஸ்புக்' பாவனையாளர்களுக்கு..........


'பேஸ்புக்' எனப்படும் சமூக வலையமைப்பு தொடர்பில் இலங்கையில் அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக, இலங்கை தேசிய கணினி அவசர சேவைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன் சிரேஷ்ட தகவல் பரிமாற்று அதிகாரி ரோஹன பல்லியகுரு இதனை தெரிவித்தார்.

இந்த இணையத்தளத்தின் ஊடாக, தனிநபர் மேற்கொள்கின்ற மோசடிகள் குறித்து, அதிக அளவிலான முறைபாடுகள் முன்வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகளின் அடிப்படையில், பேஸ்புக் மோசடிகளை செய்யபர்களை கைது செய்யும் பொருட்டு, குற்றத் தடுப்பு பிரிவின் துணையுடன் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பேஸ்புக் இணையத்தளத்தை கையாளும் போது அவதானமாக இருக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Share330
Continue reading →

Wednesday, January 19, 2011

FireFox புதிய Tab செல்ல



பயர்பாக்ஸ் பிரவுசர் வழியாக இணைய தளம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அதில் உள்ள லிங்க்கில் கண்ட்ரோல் கீயினை அழுத்திக் கொண்டு கிளிக் செய்கிறோம். இதன் மூலம் புதிய டேப் ஒன்று திறக்கப்பட்டு அந்த லிங்க்கில் உள்ள தளம் திறக்கப்பட வேண்டும். ஆனால் அந்த டேப்பிற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்பட மாட்டீர்கள். நீங்கள் பழைய டேப் உள்ள தளத்திலேயே இருப்பீர்கள். புதிய லிங்க் அல்லது டேப் மூலமாக தளம் திறப்பதே, அந்த தளத்தை உடனே பார் க்க வேண்டும் என்பதுதான்


மேலும் வாசிக்க இதனை Click



உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...


Continue reading →

ரெஜிஸ்ட்ரியில் கை வைக்கலாமா ?



விண்டோஸ் சிஸ்டத்தில் ரெஜிஸ்ட்ரி என்பது விண்டோஸ் இயக்கத்தின் மூளை அல்லது முதுகெலும்பு என்று சொல்லலாம். இங்கு தான் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கான குறியீட்டு வரிகள் உள்ளன. எனவே இவற்றில் ஏதேனும் ஒரு சிறிய மாறுதல்களை நாம் மேற்கொண்டாலும், அது இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்தும். மாறுதல்கள் தவறாக ஏற்படுத்தப்பட்டால், அது கம்ப்யூட்டர் செயல்படுவதனையே முடக்கிவிடும். எனவே தான் கம்ப்யூட்டர் கட்டமைப்பு குறித்து அறியாமல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், இதனை ஒரு பயமுறுத்தும் பேய் பங்களா என்று சொல்கிறார்கள்.

ஒரு வழிக்கு அது நல்லதுதான். இருப்பினும் சில நேயர்கள் கேட்டுக் கொண்ட சில கேள்விகளுக்கான விளக்கங்களை இங்கு காணலாம். ரெஜிஸ்ட்ரியைத் திறந்து அதன் குறியீடு வரிகளில் நாம் காண வேண்டிய அல்லது மாற்ற விரும்பும் வரியினைக் கண்டறிவத னைத்தான் நேவிகேட்டிங் தி ரெஜிஸ்ட்ரி (Navigating the registry) எனக் கூறுகின்றனர். இதை மட்டும் இங்கு

மேலும் வாசிக்க இதனை Click





உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...

Continue reading →

Saturday, January 15, 2011

கூகுள் நிறுவனம் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது


கூகுள் நிறுவனம் வெகுநாட்களாகச் சொல்லி வந்த தன் மின் நூல்கள் விற்பனை இணைய தளத்தினைத் திறந்துவிட்டது. http://books.google.com/ ebooks என்ற முகவரியில் இதனைக் காணலாம். இந்த நூல்களில் பலவற்றை இணைய வெளியில் வைத்துப் படிக்கலாம். இதன் பி.டி.எப். பதிப்பு சில நூல்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றை இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்; நண்பர்களுக்கு அனுப்பலாம்.



கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஐ-போன், ஐ-பாட் என எந்த டிஜிட்டல் ரீடிங் வசதி கொண்ட சாதனத்திலும் இதில் உள்ள நூல்களைப் படிக்கலாம். இதனால், ஒரு குறிப்பிட்ட நூலில் 34 பக்கங்களை ஐ-பாட் மூலம் படித்துவிட்டுப் பின் இன்னொரு நாளில், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரில் 35 ஆம் பக்கத்திலிருந்து தொடர்ந்து படிக்கலாம். அல்லது........



மேலும் வாசிக்க இதனை Click


உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...

Continue reading →

Friday, January 14, 2011

தவளை பாதி.. நண்டு பாதி.. கலந்த கலவை கண்டுபிடிப்பு..



கொச்சி: அழிந்துவிட்டதாக கருதப்பட்ட கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை 116 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவை ஒட்டி வங்கக்கடலில் இவை இருப்பது தெரியவந்துள்ளது. ஆழ்கடலில் இருக்கும் மீன், நண்டு உள்ளிட்ட உயிரினங்கள் பற்றி மத்திய கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி கழகம் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறது. ‘சாகர் சம்ப்டா’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின் உதவியுடன் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கேரள மாநிலம் கொச்சி அருகே வங்கக்கடலில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அழிந்து விட்டதாக கருதப்படும் ஒருவகை வவ்வால் மீன், கத்தி மீன், தவளை நண்டு ஆகியவை தற்போதும் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உயிரினங்கள் ஆழ்கடலில் சுமார் 265 மீட்டர் முதல் 457 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை. 116 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது:....


மேலும் வாசிக்க இதனை Click




உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...



Continue reading →

பேஸ்புக்கில் பாதுகாப்பு வழிகள்!



சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.

இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்....

மேலும் வாசிக்க இதனை Click




உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...




Continue reading →

நூறு வயதை எட்டவுள்ள இரட்டைச் சகோதரிகள்!




அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் சனிக்கிழமையன்று 100 வது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.

இனங்ஹரியஸ் மற்றும் வெனிஸ்ஷோ ஆகிய சகோதரிகளே நூறாவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளனர்.

எனக்கு நூறு வயது ஆகிவிட்டதாக நான் கருதவேயில்லை என்று ஒரு ககோதரி கூறினார்.

இந்தப் பிரதேச கடன் சங்கத்தில் இவர் பல ஆண்டுகளாக கணக்கொன்றைப் பேணி வருகின்றார். இதனை முன்னிட்டு அவருக்கு மேற்படி சங்கம் திடீர் வரவேற்பொன்றை அளித்தது. அதில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இப்படிக் கூறினார்.

என்னுடைய 80 வயதுக்குப் பின் எனக்கு வயது கூடியிருப்பது போல் தெரியவேயில்லை என்று அவர் மேலும் கூறினார். இந்த இரட்டைச் சகோதரிகள் 15 ஜனவரி 1911ல் பிறந்தவர்கள்.



இவர்கள் இருவரும் தமது வாழ்நாளில் பல பயணங்களை ஒன்றாக இணைந்தே மேற்கொண்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இவர்களின் குடும்பத்தவர்கள் இருவருக்கும் மாபெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
Share150


நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Home

Continue reading →

Sunday, January 9, 2011

பாகிஸ்தான் அபார வெற்றி



ஹேமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபாரமாக வெற்றி பெற்றது.

நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ரஹ்மான், அகமத் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்தது. ஆனால், நியூஸிலாந்து அணி 2வது இன்னிங்ஸில் 110 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

மேலும் வாசிக்க இதனை Click

Continue reading →

ஏமாற்றப்பட்ட சனத் ஜெயசூர்யா



ஐபிஎல் 4 தொடரின் வீரர்கள் ஏலம் 2வது நாளாக இன்றும் தொடருகிறது. இலங்கை வீரர் ஜெயசூர்யாவை வாங்க யாரும் முன்வரவில்லை. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய எல்.பாலாஜியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது.

நான்காவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியது. அதிகபட்ச விலையுடன் கம்பீரை விலைக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

அதேசமயம், கங்குலி, ஜெயசூர்யா, பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் ஆகியோரை யாரும் வாங்காத நிலை ஏற்பட்டது.

இன்று 2வது நாளாக ஏலம் தொடருகிறது. இன்றைய ஏலத்தில், உமேஷ் யாதவை ஏழரை லட்சம் டாலருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டேணியல் கிறிஸ்டியானை 9 லட்சம் டாலருக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் வாங்கின.


மேலும் வாசிக்க இதனை Click

Continue reading →

Saturday, January 8, 2011

தாவடிப் பிள்ளையார் கோவிலில் திருட்டு சம்பவம்....!!!


யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த விநாயகர் ஆலயங்களில் ஓன்றான தாவடிப் பிள்ளையார் கோவிலில் 2011-01-05 அன்று திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது..

கோவிலின் கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த பெறுமதியான பொருட்களையும் உண்டியலிருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் பூஜை நிகழ்த்துவதற்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலயக் குருக்கள், பொருட்கள் திருட்டுப்போனதைக் கண்டு அப்பகுதி கிராம அலுவலர்க்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழப்பாணத்தில் இடம்பெபேற்று வரும் திருட்டு சம்பவங்களுக் கடவுள் என்ன வதிவிலக்கா????



நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Home

Continue reading →

Wednesday, January 5, 2011

::.யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் ஏற்படுத்திய இளவயதுக் கர்ப்பம்‏.::



இணையத்தின் சமூகவலைத் தளமான முகப் புத்தகம் ( பேஸ்புக்) யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்திய முதற் பாதிப்பால் இளம் பாடசாலை மாணவி ஒருவர் கர்பமுற்றுள்ளார்.



தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலையில் உயர்தரம் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி தனது மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக சனி, ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் யாழ்ப்பாண நகரத்தில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் மேலதிக கல்வி கற்று வந்துள்ளார். போக்குவரத்து பிரச்சனை காரணமாக குறிப்பிட்ட மாணவியின் தந்தை ( கொடிகாமம் வர்த்தகர்) தனது நண்பனான நகரப்பகுதியில் உள்ளவரது வீட்டில் அதே ஆண்டில் நகர்புற கல்லூரியில் கல்வி கற்றும் ஒரு மாணவியுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த வீட்டில் உள்ள இணைய வசதி உள்ள கணனியில் தமக்கு முகப் புத்தகக் கணக்குகளை (பேஸ்புக்) ஆரம்பித்து நண்பர்களுடன் அரட்டை அடித்துள்ளனர். குறிப்பிட்ட மாணவியின் 'பேஸ்புக்' ல் தொடர்பை ஏற்படுத்திய இளைஞன் ஒருவர் தான் தற்போது மொறட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதாக தெரிவித்து நெருங்கிய நட்பினை பேஸ் புக் ஊடாக பெற்றுள்ளார்.

இந்த இளைஞனது தொடர்பை அடுத்து வீட்டு கணனியில் அரட்டை அடிப்பதை நிறுத்தி விட்டு இணைய சேவை வழங்கும் நிலையங்களில் சென்று குறிப்பிட்ட மாணவி அந்த இளைஞனுடன் அரட்டை அடித்துள்ளார். பின்னர் தனது தொலைபேசி இலக்கத்தினை வழங்கி இளைஞனுடன் தொடர்புகள் பேணி இருந்துள்ளார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளனர். மாணவி கல்வி பயிலும் பாடசாலையில் குறிப்பிட்ட மாணவி அடிக்கடி வாந்தி எடுத்ததால் சந்தேகமடைந்த அதிபர் மற்றும் பாட ஆசிரியை மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவு இட்ட போது மாணவி மறுக்கவே பெற்ரோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெற்றோர் வீட்டில் மாணவியை கூட்டிச் சென்று விசாரிக்கும் போது உண்மை வெளியே வந்தது. உடனடியாக குறிப்பிட்ட இளைஞனைப் பற்றி விசாரனைகளை தந்தை ஆரம்பித்தபோது இளைஞனின் பேஸ்புக் மாற்றப்பட்டும் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்தும் காணப்பட்டது. இரகசியமாக பேணப்பட்டு வந்த இந்தச் சம்பவம் அந்தத் தந்தையின் அடாவடித் தனத்தால் பலருக்கும் தெரியவந்தது.

குறிப்பிட்ட மாணவி தங்குவதற்கு இடம் கொடுத்த தனது நண்பனை அவரது வீட்டில் சென்று தரக்குறைவாக பேசி கைகலப்பாக மாற்றி சகலருக்கும் தெரியப்படுத்தி உள்ளார் தந்தை. பொலிசாரிடம் விசாரனைக்கு சென்ற போது மாணவியின் கர்ப்பம் பற்றிய தகவல்கள் மறைக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் நகர்ப்பகுதி நண்பன் கர்ப்பம் பற்றி முறைப்பாடு செய்ய முயல்கையில் தந்தையால் சமாதானம் ஆக்கப்பட்டு முறைப்பாடு ரத்தாகியது. இந் நிலையில் குறிப்பிட்ட மாணவி பற்றி பாடசாலை அதிபர் தகப்பனிடம் வினாவிய போது சம்பவம் பற்றி தெரியப்படுத்திய தந்தை பாடசாலை அதிபரிடம் கெஞ்சி மன்றாடி தகவல்கள் வெளியே தெரியாதவாறு மறைத்துள்ளார்.


பேஸ்புக்கில் தொடர்பு கொண்ட இளைஞன் 1989ம் ஆண்டு 13ம் திகதி பிறந்தவர் என்றும் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளதாகவும் அவரது பேஸ்புக் தரவுப்படி அவர் மானிப்பாயை சேர்ந்தவர் எனவும் யாழ்ப்பாணத்தில் பிரபல தனியார் கல்லூரியில் கல்வி பயின்றதாகவும் யாழ் மேனகன் என்னும் புனைப் பெயரில் மாணவியுடன் தொடர்பாகிய இவ் இளைஞன் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் தமக்கு தெரியாது என குறி்ப்பிட்ட மாணவியின் நண்பி தெரிவித்துள்ளார். அம்மாணவியின் பேஸ்புக் நட்பு வட்டாரத்திலிருந்தும் அவ் இளைஞர் விலகி உள்ளார் என தெரியவருகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் இன்னும் வளரவிடாது தடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


ஏனெனில் இன்னும் சில மாதத்தில் இன்னொரு குழந்தை அநாதரவான நிலையில் வீதியில் வீசப்படலாம்.


நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Home

Continue reading →

Tuesday, January 4, 2011

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் கணிணிப்பாகங்கள் திருட்டு!!!




03.01.2010 அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமான நிலையில்,
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில் கணிணிப்பாகங்கள் திருடப்பட்டசம்பவம் தெரியவந்துள்ளது..கணணி அறையின் யன்னல்கள் உடைக்கப்பட்டு அதன் ஊடாக multi media projector உட்பட பல பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன
இதனைத்தொடர்ந்து கல்லூரி அதிபர் யாழ் பொலிசாருக்கு திருட்டுச்சம்பவம் தொடர்பாக அறிவித்ததை அடுத்துவிசாரனைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். அநேற்றைய தினம் விசாரனைகளை மேற்க்கொண்டனர்

நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Home

Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog