Tuesday, January 25, 2011

கண்ட கண்ட இடங்களில் பாலியல் இன்பம் ....



பொது இடம் ஒன்றில் சில ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்திருந்து பாலியல்
இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர். அதுவும் பண்பாட்டின் உறைவிடமாக
விளங்குகின்ற யாழ் மண்ணில்தான் என்றால் நம்புவீர்களா?


எமது சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து அதிகம்
பேசப்பட்டு வருகிறது. பருவ உணர்ச்சிகளால் சிற்றின்பத்திற்கு அடிமைப்பட்டுத்
தமது எதிர்காலத்தையே அழித்துக்கொண்ட, கொண்டுவரும் பல பெண்கள் நம்மத்தியில்
இருக்கிறார்கள். இதனால், எமது சமூகத்தில் அவர்கள் குறித்த தப்பான
கண்ணோட்டம் அவர்கள் மேல் விழுவதற்கு ஏதுவாகியுள்ளது
வெட்கம், மானம், கற்பு, பயம், ஒழுக்கம் எல்லாவற்றையும் புறமொதுக்கிவிட்டு, கண்டகண்ட இடங்களிலெல்லாம் காமநுகர்ச்சியில் ஈடுபடும் சம்பவங்கள் யாழ் குடாநாட்டில்
சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. அப்படியான பல நிகழ்வுகளின் வரிசையில் பலரது
கவனத்தையும் ஈர்த்த சம்பவம் ஒன்று அதிக கவனிப்பைப் பெற்றுள்ளது. அப்படி
பொது இடம் ஒன்றில் சில ஆண்களும் பெண்களும் ஒன்றாக சேர்ந்திருந்து பாலியல்
இன்பத்தை அனுபவித்து மகிழ்ந்துள்ளனர். அதுவும் பண்பாட்டின் உறைவிடமாக
விளங்குகின்ற யாழ் மண்ணில்தான் என்றால் நம்புவீர்களா?

பாலியல் உறவு
என்பது நான்கு சுவர்களுக்குள் நடக்கும் அந்தரங்கமான உறவை பொதுஇடங்களில்
அரங்கேற்றுவது நாய்களும் மனிதர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை
என்பதையே காட்டுகின்றது.அண்மையில் யாழ் கோட்டைப்பகுதியில் நடந்த
சம்பவம் இதனை மெய்ப்பிக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக எனது நண்பர் கூறியவற்றை
அப்படியே உங்களுக்கு ஒப்புவிக்கிறேன். பொழுதுசாயும் அந்தி மாலைவேளை. ஆதவன்
தன் கடமை முடித்துவிட்டு மேற்திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். அவனது
பொன்னிற நீண்ட கதிர்கள் கோட்டையின் மேற்புறத்தைப் பிரகாசமாக்கிக்
கொண்டிருந்தன.


அவ்வேளை, சன நடமாட்டம் சற்றே குறைந்திருந்தது. ஆட்டோ
ஒன்றில் வந்திறங்கிய மூன்று பெண்களும் இரண்டு ஆண்களுமாக கோட்டைப்
பகுதியிலுள்ள மறைவிடம் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். இக்காட்சியை அவதானித்த
அப்பகுதியில் எங்கோ ஓரிடத்தில் நின்ற இளைஞர்கள் சிலர் தமது ஆராய்ச்சியில்
இறங்கினார்கள். சிறிதுநேரம் கழித்து அங்கே என்ன நடக்கிறது என அறிவதற்கு
தமது வேட்டையை ஆரம்பித்தனர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை
அதிர்ச்சியில் உறையவைத்தது. பற்றை மறைவில் உள்ள இடமொன்றில் ஒன்றாகச்
சேர்ந்து தமது காதல் திருவிளையாடல்களை நிகழ்த்தியபடியிருந்தனர். அந்த
மூன்று பெண்களின் உடல்களிலும் அரைகுறை ஆடைகளுடன் அரை நிர்வாண கோலத்தில்
தம்முடன் கூடவந்த இரு இளைஞர்களுடன் காம வேட்கையில் லயித்திருந்தனர். தம்மை
பிறர் கண்காணிப்பார்கள் என்பது பற்றியெல்லாம் அவ் இள நங்கையர்கள்
கிஞ்சித்தும் சிந்தித்தாகத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் இப்படியெல்லாம்
நடந்திருக்க மாட்டார்கள்.

காமம் தந்த போதையின் கிறக்கம் அவர்களது கண்களை
மறைத்தது. அடுத்து அங்கு நடைபெற்ற காட்சி இரத்தத்தையே உறைய வைப்பது போல்
இருந்தது. அந்த இளைஞர்கள் அவ்விடத்தை நெருங்கியதும் மரம்
ஒன்றிலிருந்து கீழே ஒருவர் குதித்தார். அவர் கையில் கமரா போன் இருந்தது.
அங்கு நடைபெற்ற அலங்கோலக் காட்சிகளை அப்படியே தமது கமராவுக்கள்
சிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவ்விடத்தை நெருங்கிய இளைஞர்களின்
ஆரவாரங்கள் காதல் வெள்ளத்தில் திளைத்திருந்தவர்களை மிரள வைத்தது. அவர்களால்
என்ன செய்யமுடியும்? அங்கு அரங்கேறிய காட்சிகளை அப்படியே அந்த மர்ம நபர்
கமரா போனுக்குள் பதிவுசெய்து வைத்திருந்தார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த
அந்தப் பெண்கள் அவரின் காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி அந்த அலங்கோலக்
காட்சிகளை அழித்துவிடுமாறு கோரி அழுது புரண்டனர்.

என்ன செய்வது
‘ஆப்பிழுத்த குரங்கின்' கதைபோல அப்பெண்களின் நிலை. இனி இவர்களின் எதிர்கால
நிலை பரிதாபத்திற்குரியதொன்றாகவே இருக்கப்போகின்றது என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.

இப்படியான சொல்வதற்கே நாக்குக் கூசும்
அளவிற்குப் பல சம்பவங்கள் யாழ் குடாநாட்டில் அரங்கேறியபடி தான்
இருக்கின்றன. தற்போதைய புறச்சூழலைப் பயன்படுத்தி பல இடங்களிலும்
முளைத்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் ஆட்களற்ற வீடுகள் முதலியன இவ்வாறான
சம்பவங்களுக்குத் தீனிபோடுகின்றன. அத்துடன், இணையத்தள வசதிகள் மற்றும்
எல்லை மீறிய கைத்தொலைபேசிப் பாவனைகளும் இதற்கு தூபமிடுகின்றன. வீடியோ கமரா
வசதிகள் கொண்ட பலவேறு விதங்களில் நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு
புழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் முறைகள்
இளவயதினரிடையே மேலோங்கிக் காணப்படுகின்றன.

இக் கைத்தொலைபேசிகளில்
ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து ரசிக்கும் கலாசாரம் தலைதூக்கியுள்ளது.
இக் கலாசாரத்திற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக, பாடசாலை
மாணவிகளும் இத்தகைய கலாசாரத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

இதனால்,
பல பெண்பிள்ளைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் எனது நண்பர் கூறிய விடயம் என் மனதை துணுக்குறச் செய்தது.

யாழ்
நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்விபயிலும்
மாணவிகள் பலர் தம் வயிற்றில் கருவைத்தாங்கி வேதனைச் சூழலில் சிக்கி
வருந்துவதாக கூறிக் கவலைப்பட்டார்.

கருவை அழிக்கமுடியாது எனவும்
மீறி அழித்தால் மாணவிகளின் உயிருக்கே உலைவைப்பதாக முடியும் எனவும் குறித்த
வைத்தியர் தரப்பால் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு
எச்சரிக்கப்பட்டதாகவும் அறியமுடிந்தது.

பெண்பிள்ளைகள் விடயத்தில்
பெற்றோர் அசட்டையீனமாக இருக்கின்றமையாலேயே இத்தகைய கீழ்த்தரமான சம்பவங்கள்
எம் மத்தியில் இடம்பெற வாய்ப்பாக அமைகின்றது. பெற்றோர் தமது பிள்ளைகளின்
ஒவ்வொரு செயற்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என
அறிவுத்தப்படுகின்றது.

எமது இனம் ஏனைய இடங்களிலிருந்து வேறுபட்டு
நிற்கிறது. காரணம் நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்ட
இனமாக சிறப்புற்றிருக்கிறது. அத்தோடு, ஏனைய இனக் கலாசாரங்களுடன்
ஒப்பிடுகையில் தனித்துவமான பண்பாட்டுப் பேணுகைளைக் கொண்டது.

இத்துணை
சிறப்புப்பெற்ற எம்மினத்தின் ஆணிவேரையும் பண்பாட்டின் அடையாளங்களையும்
அழியவிடுவது எம்மினத்திற்கு ஆரோக்கியமான தல்ல. எனவே இத்தகைய கலாசாரச்
சீர்கேடான சம்பவங்களைத் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியது
அவசியமாகும். இதனால் ஓரளவிற்காவது எமது பண்பாட்டுக் கூறுகள் அழிய விடாது
தடுக்கலாம்.

நிற்க, தடம் மாறும் யாழ்ப்பாண கலாசாரம் என்ற பகுதி
எமது சமூக கலாசாரப் பிறழ்வான விடயங்களை அப்படியே வெளிச்சமாக்கிக் காட்டும்
பகுதியாகும். மேற்கொண்டு இவ்வாறான சம்பவங்களை இனிமேலும் இடம்பெறாமற்
தடுப்பதற்கே தவிர, யாருடைய மனங்களையும் புண்படுத்துவதற்காகவோ
வேதனைப்படுத்துவதற்காகவோ அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதிஷ்டிரன்

நன்றி வீரகேசரி

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog