Tuesday, June 28, 2011


இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!

by:- IHAN
Continue reading →

Thursday, June 23, 2011

பழைய காதலியின் புகைப்படம்

பழைய புத்தகங்களின் நடுப்பக்கத்திலோ
பழைய டைரிகளின் அடிப்பக்கத்திலோ
பழைய மணிபர்ஸின் உள்பக்கத்திலோ
ஒளிந்திருக்கலாம் உங்கள் பழைய காதலியின் புகைப்படம்..

அடம்பிடித்து அவளிடம் வாங்கிக்கொண்ட
அந்தப்புகைப்படம் அப்போதைய உங்கள்
அன்றாட வஸ்துவாய் இருந்திருக்கும்..

உங்களுக்காக பிரயத்தனப்பட்டு அவள்
எடுத்துக்கொண்ட அந்தப்புகைப்படத்தில்
திணறும் சிரிப்பொன்றை செயற்கையாய் உதிர்த்திருக்கிறாள் அவள்

அந்தப்புகைப்படத்தை உங்கள் விரல்கள் தொட்டதைவிட
உங்கள் இதழ்கள்தான் அதிகம் தொட்டிருக்கும்..

தூங்கும்போதும் விழிக்கும்போதும்
நடக்கும்போதும் இருக்கும்போதும்
அழுதபோதும் தனித்தபோதும்
அதுவே உங்கள் ஆறுதல் சாதனம்..

அவளுடன் நேரில் பேச முடியாததையெல்லாம்
கொட்டித்தீர்த்தீர்கள்
செல்லமாய் திட்டி
செல்லமாய் முறைத்து
செல்லமாய் கொஞ்சி
செல்லமாய் மிஞ்சி..

சிலர் எரித்துவிட்டாலும்
சிலர் திருப்பிக்கொடுத்திருந்தாலும்
அணைந்து விடாத வேள்வியாய்
அவரவர் மனங்களில்
அது கனன்று கொண்டிருப்பது திண்ணம்..

காதலில் களித்தபோதும்
காதல் பிரிவில் தவிக்கும்போதும்
சுதந்திரமாய் எடுத்துப்பார்க்க முடிவதில்லை
அவள் புகைப்படத்தை..
எல்லோரும் தூங்கிய பின்னிரவில்
காதல் பிரிவின் சடுதியான கண்ணீரில்
அடிக்கடி நனையலாம் அந்தப்புகைப்படம்..

இப்போது ஒரு முறை
அதில் அவளது கண்களைப்பாருங்கள்
அதில் நிரம்பிவழியும் காதலை
இனி யாராலும் உங்களுக்குத்தர முடியாது..

-நிந்தவூர் ஷிப்லி-




மேலும் வாசிக்க இதனை Click

உங்கள் விருப்பத்தை தெரிவிக்க இதனை Click செய்க...

Continue reading →

விஜய்யின் புதிய கட்டளை


சீனாவுக்கு போய் ஷாங்காய் பட விழாவில் கலந்து கொண்டாரல்லவா? அன்றிலிருந்தே விஜய்யின் மனதில் ஒரு ஆசை உருவாகியிருக்கிறதாம். இனிமேல் தனது படங்கள் எல்லாவற்றையும் சீனாவிலும் ரிலீஸ் செய்தால் என்ன என்பதுதான் அந்த ஆசை.
அதற்கு காரணம், இவர் நடித்திருந்த காவலன் படம் அங்கு திரையிடப்பட்டதும் அதற்கு அவர்கள் தந்த ரீயாக்ஷனும்தான். ஜப்பானில் ரஜினி படம் ஓட ஆரம்பித்ததிலிருந்து அவருடைய எல்லா படங்களையும் அங்கு அனுப்பி ரிலீஸ் செய்து கொண்டிருந்தார்கள். அதைப்போலவே தனது படங்களும் சீனா செல்ல வேண்டும் என்று கட்டளையிட காத்திருக்கிறாராம் விஜய்.
இதற்கிடையில் முக்கியமான செய்தி ஒன்று. தனது பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி சுமார் 100 ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களை கண் தானம் செய்ய வைக்கும் திட்டம் இருக்கிறது அவருக்கு. தமிழகமும் முழுவதுமுள்ள ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட சமூக சேவைகளையும் செய்ய வலியுறுத்தியிருக்கிறார் அவர்.
Continue reading →

Wednesday, June 22, 2011


“ஏழை மக்களுக்கு உதவிட, வெகு விரைவில் மக்கள் இயக்கம் ஒன்றூ துவங்கப் போகிறேன்” என்று அகரம் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நடிகர் சூர்யா கூறினார்.

சூர்யாவின் தொண்டு நிறுவனமான அகரம் பவுண்டேஷன் சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா சென்னையிலுள்ள பிலிம் சேம்பர் தியேட்டரில் இன்று நடை பெற்றது.

இவ்விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது;

நான் சமூக சேவை செய்வதற்கு என் தந்தை சிவகுமார் தூண்டு கோலாக உள்ளார். அவர் கடந்த 32 வருடங்களாக ஏழைகளுக்கென பலவிதமான உதவிகள் வழங்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு அப்பொறுப்பை நான் ஏற்றேன். அதன் பிறகு அகரம் பவுண்டேஷன் அமைப்பு துவக்கப்பட்டது.

இதன் மூலம் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது மேலும் விரிவுபடுத்தப்படும். அடித் தட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு எங்களால் முடிந்த பணிகளை செய்வோம்.

அகரம் கல்வி அறக் கட்டளை, விதை திட்டத்தின் கீழ் பண உதவி செய்வது மட்டுமின்றி இக்கால மாணவர்கள் சமூகத்தை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்வதற்கு தேவையான பயிற்சிகளையும், நிபுணர்கள் உதவியோடு செய்து வருகிறது.

ஏழைகளுக்கு உதவுவதற்காக அகரம் தன்னார்வலர்களின் உதவியோடு மக்கள் இயக்கம் உருவாக்கப்படும் அதற்காக வங்கிகளின் ஒத்துழைப்பு மற்றும் பல நல்ல உள்ளங்களின் நன்கொடை என ஒருங்கிணைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த இயக்கம் மலரும். அதற்கு ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உதவிகளை ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.’’ என்றார்.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை 'மக்கள் இயக்கம்' என்ற அமைப்பாக அண்மையில் மாற்றினார். அவருக்கு போட்டியாக ஒருவேளை சூர்யாவும் 'மக்கள் இயக்கம்' தொடங்குகிறாரோ என்று எண்ணத் தோன்றினாலும், இதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
Continue reading →

100 இளம் பெண்களை ஆபாசபடம்எடுத்து மிரட்டியஆசாமி



இளம்பெண்களை மயக்கி ஆபாச
படம் மற்றும்
வீடியோ எடுத்து மிரட்டி வந்த
ஆசாமி சிக்கிய
சம்பவம், ஐதராபாத்தில்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்தவர்
சாய் கிரண் (26). அழகும்,
இளமை துடிப்பும்
மிக்க வாலிபர். இளம்
பெண்கள், நடுத்தர
வயதுள்ள
பெண்களை கண்டால்
உடனே அவர்களுக்கு வலை வீசுவார்.
நைசாகப் பேசி,
அவர்களது போன்
நம்பர்களை வாங்கிக்
கொள்வார்.
அடிக்கடி போனில்
கிளுகிளுப்பாக
பேசுவார் .
அவரது வலையில்
சிக்கும்
பெண்களை பட்டியலிட்டு தன்
வழிக்கு கொண்டு வருவார் .
தனிமையில்
அவர்களுடன் ஜாலியாக
இருப்பதுடன்,
அவர்களுக்கு தெரியாமலே ஆபாச
ஸ்டில்களும் ,
வீடியோவும்
எடுத்துக்கொள்வார்.
இதுபோல் 100
பெண்களை அவர் ஆபாச
படம் எடுத்துள்ளார்.
பின்னர்
அவர்களை மிரட்ட
ஆரம்பித்து விடுவார்.
கேட்கும்
பணத்தை கொடுக்காவிட்டால்
ஆபாச படத்தை நெட்டில்
போட்டுவிடுவேன்,
வீட்டுக்கு படங்களை அனுப்பி விடுவேன்�
என்று பயமுறுத்தி அடிக்கடி பணம்
பறிப்பார் .
இதுபற்றி போலீசாருக்கு புகார்கள்
போனது . தீவிர
கண்காணிப்புக்கு பிறகு சாய்
கிரணை வளைத்தனர்.
வழக்குப்
பதிவு செய்து ஜெயிலுக்கு அனுப்பினர்.
ஆனால்
ஜெயிலுக்கு போன
வேகத்திலேயே ஜாமீன்
வாங்கிக் கொண்டு சாய்
கிரண் வெளியில்
வந்துவிட்டார் .
Continue reading →

Monday, June 20, 2011

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?



எமது கணனியில் உள்ள Driveகளில் உள்ள fileகளை மற்றவர்கள் பார்க்காதவாறு அந்த Driveவையே மறைத்து வைத்துக் கொள்ளலாம். அது எப்படி முடியும்? இது உங்கள் மனதில் உள்ள கேள்வி. இதே இப்படிச் செய்து பாருங்கள்..

வழிமுறை -1
1) ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும்.
2) இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.
(கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்).
3) இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.
4) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும்.

5) இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும்
உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்

6) இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும்
remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்திருக்கும்.

மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முன் கூறியபடியே முதல் நான்கு நிலைகளையும் செய்து Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்
அடுத்து assign letter F என்று உள்ளீடவும்
இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் மறைந்திருந்த டிரைவ் மீண்டும் கணினியில் இருக்கும்
பின்குறிப்பு :இதனால் உங்கள் கணினியில் உள்ள தகவல்கள் இழக்கபடுவதில்லை

வழிமுறை -2
1) ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்து ரன் கமாண்ட் தேர்வு செய்யவும்
2) ரன் கமாண்டில் regedit என்று டைப் செய்யவும் (இப்பொழுது ரிஜிஸ்டரி எடிட்டர் திறக்கும்)
3) இதில் தாங்கள் செல்லவேண்டிய பகுதி
HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer
4) Explorer-கிளிக் செய்தவுடன் இதன் வலப்புறம் ஒரு சிறிய விண்டோ தோன்றும்
5) இதில் ஏதேங்கிலும் ஒரு வெற்று இடத்தில் வலது கிளிக் செய்து New என்பதனை தேர்வு செய்து DWORD Value என்பதை தேர்வு செய்யவும் பின்னர் அதை Rename செய்து NoDrives என்று பெயரிடவும்
Drive Value
A: 1
B: 2
C: 4
D: 8
E: 16
F: 32
G:64
H:128
I:256
J:512
K:1024
Z: 33554432
இப்படியாக கூடி கூடி போகும்
6) தங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த எண்னை NoDrives கிளிக் செய்து Modify என்பதை செலக்ட் செய்து C டிரைவ் என்றால் 4 என்று உள்ளீட்டு, Decimal என்பதை செலக்ட் செய்து OK கொடுக்கவும்
(கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மறைந்து போயிருக்கும்)

மீண்டும் மறைத்த டிரைவ் வரவைப்பதற்கு முதல் 5 நிலைகள் சென்று தாங்கள் உண்டாக்கிய NoDrive என்பதை டெலீட் செய்துவிடவும் (கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் டிரைவ் மீண்டும் வரும்)
Continue reading →

Sunday, June 19, 2011

NANBAN SHOOTING SPOT PICTURES.....





Continue reading →

சாய்பாபா அறையில்கோடி கோடியாக பணம்,தங்கம்



புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில்
உள்ள , சத்ய
சாய்பாபாவின்
அறை நேற்று முன்தினம்
திறக்கப்பட்டது .
அங்கு கோடி கோடியாக
பணமும், தங்கம் மற்றும்
வைர நகைகள் குவியல்
குவியலாக
இருந்துள்ளன.
சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள்
முன்னிலையில்
அவை கணக்கிடப்பட்டு,
வங்கியில் டெபாசிட்
செய்யப்பட்டன.
ஆன்மிக தலைவராக
இருந்து, எண்ணற்ற சமூக
சேவைகளை ஆற்றியவர்
சாய்பாபா. உலகம்
முழுவதும் பல
கோடி பக்தர்களை கொண்ட
சாய்பாபாவின் உடல்
நிலை, கடந்த மார்ச் 28ம்
தேதி மோசமடைந்தது.
அனந்தபூர்
மாவட்டத்தில் உள்ள
சத்தியசாய் உயர்
மருத்துவ அறிவியல்
மையத்தில்,
அவருக்கு தீவிர
சிகிச்சையளிக்கப்பட்டது.
இருந்தும்,
சிகிச்சை பலனின்றி,
ஏப்ரல் 24ம் தேதி அவர்
சித்தியடைந்தார்.
பிரசாந்தி நிலையத்தில்,
அவர் வசித்து வந்த
பிரத்யேக அறையான
யஜூர்வேதமந்திர், அவர்
சிகிக்சைக்காக
மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட
சிறிது நாட்களிலேயே பூட்டப்பட்டது.
அங்கு ஏராளமான தங்க
நகைகளும், பணமும்
இருப்பதாக
கூறப்பட்டது.
இது குறித்து பலவித
கருத்துகள் பக்தர்கள்
மத்தியில் நிலவியது.
இதைத் தொடர்ந்து,
சாய்பாபாவின்
அறையை திறப்பது என,
அறக்கட்டளை உறுப்பினர்கள்
முடிவு செய்தனர் .
இந்நிலையில்,
ஒன்றரை மாதங்கள்
கழித்து,
நேற்று முன்தினம்
காலை 10
மணிக்கு சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள்
முன்னிலையில் அந்த
அறை திறக்கப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டின்
முன்னாள்
தலைமை நீதிபதியும்,
சத்யபாபா டிரஸ்ட்டின்
உறுப்பினருமான
பி .என்.பகவதி, செயலர்
சக்ரவர்த்தி,
எஸ்.வி.கிரி,
வி.சீனிவாசன்,
சத்யபாபாவின் சீடரும்,
பாதுகாவலருமான
சத்யஜித் ஆகியோர்
முன்னிலையில்
யஜூர்வேதமந்திர்
திறக்கப்பட்டது .
இவர்களுடன், சுப்ரீம்
கோர்ட் முன்னாள்
நீதிபதி ஏ.பி.மிஸ்ரா,
கர்நாடக ஐகோர்ட்
முன்னாள்
நீதிபதி வைத்தியானந்தா ஆகியோரும்
அறைக்குள் சென்றனர் .
அவர்கள், அறையின்
உள்ளே போனபோது,
ஒவ்வொரு அறையிலும் ,
நகைகளும், பணமும்
குவியல் குவியலாக
இருந்தது தெரியவந்தது.
பணம் கட்டுக்கட்டாக
இருந்துள்ளது. வைர
நகைகளும் அதிகமாக
இருந்துள்ளன. தங்க
நகைகளை பொறுத்தமட்டில்
மோதிரங்கள் ,
சங்கிலிகள் மற்றும்
தங்கக் கட்டிகளும்
விலை மதிப்பு மிக்க
கற்களும் இருந்ததாக
கூறப்படுகிறது.
அங்கிருந்த பணம்,
நகைகளை கணக்கெடுத்து தனியாக
பிரிக்கும் பணியில்,
சாய்பாபா அறக்கட்டளை கல்விக்
கூடத்தில் பயிலும்
மாணவர்கள்
ஈடுபடுத்தப்பட்டனர்.
ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியா அதிகாரிகள்
வரவழைக்கப்ப்பட்டு,
அவர்கள் பணத்தையும்,
நகைகளையும்
மதிப்பீடு செய்தனர்.
இதற்காக, வங்கியில்
இருந்து பணம் எண்ணும்
இயந்திரங்களை கொண்டு வந்து இருந்தனர்.
பணத்தையும்,
நகைகளையும்
வங்கியில் டெபாசிட்
செய்தனர்.
அறை திறக்கப்பட்டதில்
இருந்து அனைத்து நிகழ்வுகளும்,
வீடியோவில்
படமாக்கப்பட்டது.
பொதுமக்களோ,
பத்திரிகையாளர்களோ யாரும்
உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்
ஆர் .ஜே. ரத்னாகர்
நிருபர்களிடம்
கூறுகையில் ,
"யஜூர்வேதமந்திர்
அறையில் இருந்த பணம்,
ஸ்டேட் பாங்கில்
டெபாசிட்
செய்யப்பட்டுள்ளது.
தங்கம் மற்றும் வைர
நகைகளை மதிப்பீடு செய்யும்
போது , வருமான
வரித்துறையால்
அனுமதிக்கப்பட்ட
மதிப்பீட்டாளர் உடன்
இருந்தார்,'' என்றார்.
எவ்வளவு பணம்
இருந்தது, நகையின்
மதிப்பு பற்றி அவர்
வெளிப்படையாக
எதுவும்
தெரிவிக்கவில்லை.
நகை மற்றும்
பணத்தை மதிப்பீடு செய்வதற்கு இரண்டு நாட்களானது.
வங்கி வட்டாரங்களில்
கிடைத்த தகவல்படி, 98
கிலோ தங்க நகைகளும்,
307
கிலோ வெள்ளி நகைகளும்,
ரூ.11 கோடியே 56 லட்சம்
பணமும் இருந்ததாக
கூறப்படுகிறது .
Continue reading →

Saturday, June 18, 2011

பிரித்தானியாவின் கரங்களிலும் தமிழரின் இரத்தம்! பிரித்தானிய நாடாளுமன்றில் தெரிவிப்பு


அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட இலங்கையர்களை திருப்பியனுப்புவதன் மூலம் எமது கரங்களிலும் தமிழரின் இரத்தத்தினை வழிந்தோட விடப்போகின்றோமா என்று பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Siobhain McDonagh நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து தமிழர்கள் சிலர் பிரத்தியேகமாக அமர்த்தப்பட்ட தனியார் வானூர்தியில் இன்று திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் தமது சொந்த இடங்களை சென்றடைவார்களா என்பது பற்றி தெரியாது.

இதனைவிட மிக மோசமாக செயற்பாடு என்னவெனில் இவர்களில் சிலரது இரகசிய ஆவணங்களை பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு முகவரமைப்பும், குடிவரவுத் திணைக்களமும் இலங்கைத் தூதரகத்துடன் பரிமாற்றம் செய்திருக்கின்றன.



என்னைப் பொறுத்தளவில் இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்புப் பிரச்சினை இருக்கின்றது. இது தொடர்பாக ஆதாரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலையிலும், இவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இலங்கைக்கு திரும்பிச் செல்லும் தமிழ் அகதிகள் அங்கே கைது மற்றும் வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவார்கள் எனத் தெரிந்து கொண்டும் பிரித்தானிய அரசாங்கம் நேற்று 40 தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.

எனவே, மதிப்பிற்குரிய துணை சபாநாயகர் அவர்களே, தமிழர்களை திருப்பி அனுப்புவது பற்றி பிரித்தானிய நாடாளுமன்றம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

திருப்பி அனுப்பாது தடுக்கப்போகின்றோமா அல்லது எமது கரங்களிலும் தமிழ் இரத்தத்தினை வழிந்தோட விடப்போகின்றோமா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.

திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள் இலங்கை அரசாங்கத்தால் துன்புறுத்தப்படும் சில சம்பவங்களை அனைத்துலக மன்னிப்புச்சபையானது அடையாளம் கண்டுள்ளதால் பிரித்தானியாவிடம் அரசியல் தஞ்சம் கோரி நின்ற இலங்கைத் தமிழர்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களிற்குத் திருப்பி அனுப்பப்படக் கூடாது என மன்னிப்புச் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பொது நலவாய அமைப்பில் முக்கிய பங்காற்றும் பிரித்தானியா, அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனில் அடைக்கலம் புகுந்திருந்த தமிழ் மக்கள் விடயத்தில் தனது கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
Continue reading →

விண்டோஸ் 8: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பற்றிய தகவல்கள்




தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.

தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார்.

தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.

திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குப் பயன்படும் விஷயங்களில், முதலாவதாக, விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க, இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களை மாற்ற வேண்டிய தேவை இருக்காது.

ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதனை இயக்க புதிய ஹார்ட்வேர் சாதனங்களுடன் கூடிய பெர்சனல் கம்ப்யூட்டர் தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால், விஸ்டா கம்ப்யூட்டர் பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது.

அந்த தவறை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். ஹார்ட்வேர் தேவைக்கென செலவு இருக்காது.

புதிய கம்ப்யூட்டர் வாங்கினால் தான், விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி, புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.

அடுத்ததாக, விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும்.

இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. "கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்' என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய ஹார்ட்வேர் கொண்ட கம்ப்யூட்டர் அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது.

இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள், வழக்கம்போல, தற்போதைய ஏரோ வகை இடைமுகத் தினைப் பயன்படுத்தலாம்.

விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப்படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மானிட்டர்களைக் கொண்டு பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும்.

தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி, பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது. இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும்.

தொடுதிரை மானிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம்போல பயன் பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.

புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில் நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன.

இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம். பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல, ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.

இருப்பினும் சில விஷயங்களை இப்படித்தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மானிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால், திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும்.

1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும். 1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும், 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.

விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான தேதி அறிவிக்கப் படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும்போது, அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள், இப்போதே மேலே கூறப்பட்ட மானிட்டர்களையும், தற்போதுள்ள ஹார்ட்வேருக்குச் சற்று கூடுதலான திறன் கொண்ட கம்ப்யூட்டர்களையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது
Continue reading →

சிறுநீரகத்தை மாற்றியரஜினி




மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டிருக்கிறார்
சூப்பர் ஸ்டார் ரஜினி.
ஜுலை முதல்வாரத்தில்
அவர்
சென்னை திரும்புவார்
என்று தகவல்கள்
கசிந்து வருகின்றன.
இந்நிலையில்
சிங்கப்பூரிலிருந்து வெளிவரும்
தமிழ்முரசு இதழில்
ரஜினியின் உடல்
நிலை குறித்து சில
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
அதில்
தெரிவிக்கப்பட்டிருக்கும்
அதி முக்கியமான
செய்தி இதுதான்.
ரஜினிக்கு இரண்டு சிறுநீரகங்களும்
செயலிழந்ததால் ,
அவரது மகள்களில்
ஒருவரது சிறுநீரகம்
பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த சிறுநீரக
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக
முடிந்த
காரணத்தாலும் அவர்
தொடர்ந்து ஓய்வில்
இருக்க வேண்டும்
என்பதாலும்
ஜூலை முதல் வாரம்
வரை சிங்கப்பூரில்
இருப்பார்.
அதன்பின்
சிங்கப்பூரிலிருந்து வேறு ஏதேனும்
ஒரு நாட்டுக்கு சென்று ஓய்வெடுக்கக்
கூடும் .
அப்பாவுக்கு சிறுநீரக
தானம் செய்த மகளும்
தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்டுள்ளார்
என்று அந்த இதழில்
செய்தி வெளியாகியிருக்கிறது.
ஆனால் யார் அந்த மகள்
என்பதை அந்த நாளிதழ்
உறுதியாக
தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில்
மருத்துவமனையில்
இருந்து டிஸ்சார்ஜ்
செய்யப்பட்ட ரஜினி,
தமிழக முதல்வர்
ஜெயலலிதாவிடம்
தொலைபேசியில்
பேசினார் . புதிய
முதல்வருக்கு தனது வாழ்த்துக்களையும்
தெரிவித்திருக்கிறார்
Continue reading →

Friday, June 17, 2011

இணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை ஒரு நொடியில் அழிக்க



உங்கள் கணணியில் பல்வேறுபட்ட இணைய பிரவுசர்களை பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும் போது ஒவ்வொரு பிரவுசர்களிலும் பார்க்கும் பக்கங்கள் சேர்ந்து கொள்ளும்.

இவற்றை அழிக்க கணணியை சுத்தப்படுத்தும் மென்பொருட்களை கொண்டு செய்யலாம். எனினும் Browser Cleaner மென்பொருள் சிறியதும் மிக விரைவாக செயல்பட கூடியதுமாகும்.

அத்துடன் ஒரே நேரத்திலே அத்தனை பிரவுசர்களின் பக்க காட்சிகளையும்(History) அழிக்கலாம். இந்த Browser Cleaner மூலம் Internet Explorer, Firefox, Chrome, Opera, Safari, Avant Browser, Flock போன்ற அத்தனை பிரவுசர்களின் பக்க வரலாறுகளை அழிக்கலாம். அத்துடன் மேலும் பல வசதிகளும் உண்டு.
Continue reading →

யாழ் இந்துக்கல்லூரி உயர்தர வகுப்ப மாணவர்களின் ஒன்று கூடல் 2011

Continue reading →

வேலாயுதம் இசை வெளியீடு ஜீலை 5


விஜய்யின் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் வேலாயுதம் .
இப்படத்தின் இசை வெளியீடு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் வந்தன .
இப்போது திட்டவட்டமாக ஜீலை 5 என அறிவிக்க பட்டுள்ளது .
விஜய்யின் படங்களில் பாடல்கள் முக்கியம் பெறுகின்றன . அந்த
வகையில் இப்பட பாடல்களும் எதிர்பாக்க படுகின்றன .இப்படத்தில்
மொத்தமாக 7 பாடல்கள் உள்ளன .
இப்படத்தின் "சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது " என்ற பாடலை
2 கோடி செலவில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர் .

இப்பட பாடல்கள் ...
1) சொன்னால் புரியாது சொல்லுக்குள் அடங்காது.......
2 ) மயக்கி புட்டான்.......
3) ரத்தத்தின் ரத்தமே....
4) மஞ்ச நதி மரத்த கட்ட....
5) [ஹன்சிகாவுடன் ஒரு மெலோடி பாடல்]
6) வேலா வேலா வேலாயுதம் ......
7) தீம் சாங்
Continue reading →

Thursday, June 16, 2011


மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது.



Microsoft Internet Explorer 9
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தி, அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துள்ளது.



பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.



இந்த பிரவுசர் வெளியான போது மைக்ரோசாப்ட் இந்தியாவில் பிரபலமான 29 இணைய தளங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ பிரபலப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என நம்பப்டுகிறது.



தமிழ் மற்றும் பிற மொழிகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரை நமது கணணியில் இயக்க http://windows.microsoft.com/en-US/internet-explorer/downloads/ie-9/worldwide-languages என்ற முகவரி சென்று அங்கிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



நமது கணணியில் இயங்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் ( விஸ்டா/விண்டோஸ் 7 x 32 / 64 பிட் ) எது என அறிந்து அதற்கேற்ற பதிப்பினை தரவிறக்கம் செய்யலாம்.



மேலும், விண்டோஸ் எக்ஸ்பியில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 இயங்காது என்பது குறிப்பிடதக்கது.



இருப்பினும் இந்த வரிசையில் மைக்ரோசாப்ட் சற்று தாமதமாகவே நுழைந்துள்ளது. ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த எபிக் ஆகிய பிரவுசர்கள் இந்திய மார்க்கெட்டைக் குறி வைத்து உருவாகி அமலில் உள்ளன என்பது நினைவிருக்கலாம்.



அதேசமயம், இந்திய சந்தையை மைக்ரோசாப்ட் குறி வைப்பது முதல் முறையல்ல. பொனடிக் கீபோர்ட், இந்திய மொழிகளுக்கான இன்டிங் லாங்குவேஜ் இன்புட் டூல் உள்ளிட்டவற்றை ஏற்கனவே அது அறிமுகப்படுத்தியுள்ளது. இமெயில், மெசஞ்சர் ஆகியவற்றிலும் இந்திய மொழிகளை அது ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது.
Continue reading →

வடக்கில் அரை இராணுவ ஆட்சி


வடக்கில் அரை இராணுவ ஆட்சி நடைபெறுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.பத்ரமுல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் : -

வடக்கில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாதும், கருத்துக்களை வெளிப்படுத்த முடியாதும், சுதந்திரமாக நடமாட முடியாதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

வடக்கில் பொதுமக்கள் வதிவிட பதிவுகள் மேற்கொள்ளக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும் கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் புகைப்படத்துடன் கூடிய பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் மூலமாக இராணுவத்தினர் நீதிமன்ற தீர்பினை அவமதிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு மக்களுக்கு உண்மையான தீர்வினை முன்வைக்க அரசிடம் வேலைதிட்டம் இல்லை. ஆகையால் உண்மையான பிரச்சனைகளை தீர்த்து வைக்கவேண்டும்.

முகாம்களில் உள்ளவர்களின் பிரச்சனைக்கு சரியான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டும். என்றார்.
Continue reading →

இலங்கை விவகாரம்! விஜய் பரபரப்பு அறிக்கை!!

அரசியலில் நுழையும் எண்ணம் வந்த நாள் முதலே நடிகர் விஜய் அவ்வப்போது நாட்டு நடப்புகள் பற்றி அறிக்கை விடுவது, பேட்டிகளில் சாடுவது என முன்னேறிக் கொண்டிருக்கிறார். கோவையில் சிறுமி கற்பழித்து கொல்லப்பட்டபோது, குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும் என்று ஆக்ரோஷமாக அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு தேர்தல் நேரத்திலும் அப்போதைய ஆளும் கட்சிக்கு எதிராக அறிக்கை மற்றும் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இலங்கை விவகாரம் பற்றியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் விஜய். இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியிருப்பதைத் தொடர்ந்து விஜய் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உரிமைகளையும் உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது ஆறுதலான விஷயம். இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியோடும் சந்தோஷத்தோடும் சரிசமமான உரிமைகளோடு வாழ வேண்டும். அதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.
Continue reading →

காவலனை பார்த்து கண்கலங்கிய சீன ரசிகர்கள்: விஜய் நெகிழ்ச்சி!

ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்தவிழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விஜய் பங்கேற்பது இதுதான் முதன்முறை.

விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது, ஷாங்காய் பட விழாவில் "காவலன்" படம் பங்கேற்றது, அந்தவிழாவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்தது. நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இங்குள்ள சீனர்கள் ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடித்ததும் என் கேரக்டரான பூமி பெயரைச் சொல்லி அனைவரும் பாராட்டியது எனக்கும் மிகழ்ச்சியாகவும், அதேசமயம் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த விழா அமைந்தது.

உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் படம் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இவ்வாறு விஜய் பேசினார்.

விஜய்யின் பேச்சுக்கு அனைவரையும் கவரே, எல்‌லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு ஒன்றை விஜய் வழங்கினார். இவ்விழாவில் காவலன் படம் பங்கேற்ற உறுதுணையாக இருந்த ரேக்ஸ் அவர்களுக்கு விஜய் தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.
Continue reading →

Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog