யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த விநாயகர் ஆலயங்களில் ஓன்றான தாவடிப் பிள்ளையார் கோவிலில் 2011-01-05 அன்று திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது..
கோவிலின் கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த பெறுமதியான பொருட்களையும் உண்டியலிருந்த பணத்தையும் திருடிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் பூஜை நிகழ்த்துவதற்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலயக் குருக்கள், பொருட்கள் திருட்டுப்போனதைக் கண்டு அப்பகுதி கிராம அலுவலர்க்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழப்பாணத்தில் இடம்பெபேற்று வரும் திருட்டு சம்பவங்களுக் கடவுள் என்ன வதிவிலக்கா????
Home
0 comments:
Post a Comment