
ஐபிஎல் 4 தொடரின் வீரர்கள் ஏலம் 2வது நாளாக இன்றும் தொடருகிறது. இலங்கை வீரர் ஜெயசூர்யாவை வாங்க யாரும் முன்வரவில்லை. அதேசமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய எல்.பாலாஜியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது.
நான்காவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கியது. அதிகபட்ச விலையுடன் கம்பீரை விலைக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
அதேசமயம், கங்குலி, ஜெயசூர்யா, பிரையன் லாரா, கிறிஸ் கெய்ல் ஆகியோரை யாரும் வாங்காத நிலை ஏற்பட்டது.
இன்று 2வது நாளாக ஏலம் தொடருகிறது. இன்றைய ஏலத்தில், உமேஷ் யாதவை ஏழரை லட்சம் டாலருக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், டேணியல் கிறிஸ்டியானை 9 லட்சம் டாலருக்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் வாங்கின.
மேலும் வாசிக்க இதனை Click

0 comments:
Post a Comment