Sunday, December 26, 2010

விழித்திடு மனமே!!!


இன்றைய சமுதாயமும் அதன் பாரம்பரியமும் சீர்குலைந்து செல்கின்றது ,,இதற்கு காரணம் இளைஞர்களின் அசாதாரண நிலை தான் காரணம்.இதற்கு நாம் சொல்லும் காரணம் வேற்றுநாட்டவரின் வருகை,வேற்றுஇனத்தவரின் வருகை,பேஸ்புக்கின் வருகை என பிறர் மீது குற்றம் சுமத்துகின்றோம்.சிந்தித்து பார்க்கும் போது நாம நாம ஒழுக்கமாய் இருந்தால் ஏன் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டும்?



ஒவ்வரு சமுதாயத்திற்கும் என்றும் ஒவ்வரு பாரம்பரியம் காணப்படுகின்றது.அதே போன்று நமது சமுதாயத்திற்கு என்றும் தனிப்பட்ட பாரம்பரியம் காணப்படுகின்றது.அது ஏனைய தேசத்தை விடவும் மாறானது.எப்படியும் வாழலாம் என்பதை விட இப்படித்தான் வாழவேண்டும் என்பது தான் எமது கலாச்சார பாரம்பரியம்.

இன்று எமது சமுதாயத்தை சீர்குலைக்கும் முக்கிய காரணமாய் காணப்படுவது இளவயதுக்கர்ப்பம்.அதுவும் பாடசாலை மாணவர்களால் ஏற்படுகின்றது .பெண்ணியம் என்பது புனிதமானது அதனை இன்று சிதைக்கின்றனர்.பெண்களை பார்க்கும் போது கை எடுத்து கும்பிட வேண்டுமே தவிர கை தட்டி சிரிக்க கூடாது .

பெற்றோர்கள் பிள்ளைகளை ஒழுக்கமாகத்தான் வளர்கின்றனர்கள்.அவர்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்.அதை பிள்ளைகள் தான் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.இப்படித்தான் பெண்கள் இருப்பார்கள் என்று தெரிந்திருந்தால் அன்று பாரதி பெண் சுகந்திரம் பற்றி பேசி இருக்கமாட்டார்.பெண்கள் ஜான்சி ராணி மாதிரி வீரச பெண்ணாக காணப்படா விட்டாலும் சமுதாயம் சீர்குலைய காரணமாய் இருக்க கூடாது ..

இன்றைய இளைஞர்கள் ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்ப வேண்டுமே தவிர ஒரு சமுதாயம் சீர்குலைய காரணமாய் இருக்க கூடாது.அதற்கு ஒவ்வருவரும் சிந்திக்க வேண்டும்.சிந்தனைகள் பலமானதாக காணப்பட்டால் நடத்தைகளும் நல்லமுறையில் அமையும் .எமது சமுதாயம் மலை போன்றது அதை காற்றடித்து சாய விடக்கூடாது.ஒவ்வரு குடிமகனும் விழித்திருக்க வேண்டும் ......
விழித்து எழு மனமே .................

நன்றி உங்கள் வரவிற்கு மீண்டும் வருக

Home

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog