இலங்கையில் யாழ். மாவட்டத்தில் வடமராட்சியில் உள்ள ஒருவரின் வீட்டு கோழிக் கூண்டுக்குள் வெள்ளை நிற நாக பாம்பு ஒன்று பிடிபட்டு உள்ளது. பருத்தித்துறையில் வியாபாரிமூலையைச் சேர்ந்த சி. இராதாகிருஷ்ணன் என்பவருடைய வீட்டுக் கோழிக் கூண்டுக்குள்ளேயே இந்த அதிசய நாகம் அகப்பட்டுக் கொண்டது.
அதிசய பாம்பைப் பார்வை இடுகின்றமைக்காக பிரதேச மக்கள் இவ்வீட்டுக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளார்கள். வன விலங்கு அதிகாரிகளிடம் பாம்பைக் கையளிக்க வீட்டு உரிமையாளர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.
0 comments:
Post a Comment