Friday, September 9, 2011

வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!

பாக்கிஸ்தானில் பெண் ஒருவர் தனது வயிற்றில் வளரும் மிகப்பெரிய பாம்பினை அகற்றுவதற்கு மேலதிகாரிகளிடம் உதவிகோரியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் ஊடக தகவல்களின்படி லாகூர் வடக்கு பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான Rasheedan Bibi தற்செயலாக பல மாதங்களுக்கு முன் தண்ணீர் குடிக்கும் போது அதற்குள் கிடந்த சிறிய பாம்பை காணாமல் அந்த தண்ணீரை குடித்திருக்கிறார்.
பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவரது வயிற்றுக்குள் இருந்து பாம்பு சிறிது சிறிதாக வளரத்தொடங்கியுள்ளது. காலப்போக்கில் இவரது வயிறு வீங்கி நிலமை மோசமான போது இவர் கர்ப்பமாகியுள்ளார் என நம்பப்பட்டது. எனவே வைத்திய உதவியை நாடினார் இவர்.
7 மாதங்களின் பின்னர் இவரது வயிற்றுக்குள் வளர்வது என்ன என்பதை வைத்தியர்கள் பரிசோதித்து பார்த்த போது அங்கே சுருண்டு படுக்கும் பெரிய பாம்மை கண்டு வியந்து போயுள்ளார்கள்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த இந்த பெண் அதனை அகற்றுவதற்கு வசதி இல்லாத காரணத்தால் அவளது வயிற்றில் வளரும் ராட்சத பாம்பை அகற்ற உள்ளுர் அதிகாரிகளிடமும் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog