Saturday, December 4, 2010

தமிழர்களே..... சிந்தியுங்கள்.....!!!

தமிழ்ப் பாரம்பரியமும், பழமையும் இன்று தறிகெட்டுத் தளம்புகின்றன. தமிழனென்று மார்தட்டி வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. இன்று நவீனத்துவம் என்ற பெயரில் தமிழ் சிதைக்கப்படுகிறது.

எதையும் தன்னுள் உள்வாங்கி பழமையை போற்றியும், புதுமையைப் புகுத்தியும் ஓர் செம்மையடைந்த-கருவி மொழியாக திகழ்ந்திடும் தமிழ் மொழியை தற்காலத்தில் தமிழனே நலிவடையச்செய்கின்றான் என்பது மனவருத்தமடையச்செய்கின்றது.

தரணி போற்றும் தமிழணங்கை, தாய்த்தமிழை நவீன மொழி,நாகரிக மோகத்தின் காரணத்தால் கொச்சைத் தமிழாக்கி பேசுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?தமிழ் பாரம்பரியத்தை உதறித்தள்ளுவது சரியானதா?        
சிந்தியுங்கள்.... தமிழர்களே..... சிந்தியுங்கள்.....!!!

           ' 'தமிழனென்று சொல்லுவோம்....தமிழை தரணியில் உயர்த்திடுவோம்....!''

0 comments:

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog