Sunday, December 5, 2010

விழித்திடு......சமுதாயமே....

இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையை நினைத்தால் கண்ணீர்த் துளிகள் மட்டுமே காணிக்கையாக எஞ்சி நிற்கும்.  இன்றைய பெண் சமுதாயமே ஒட்டு மொத்தமாக நாணி நிற்கவேண்டிய கேவல நிலை.

நன்கு பெயரறியப்பட்டு புகழின் உச்சத்தில் உள்ள சில பெண் பாடசாலை மாணவிகளின் ஒழுக்க நிலை மிகவும் வெட்கக்கேட்டை உருவாக்கியுள்ளது.

தமிழ்ப் பெண்களுக்கேயான தனித்தன்மை இழக்கப்பட்டு வருகின்றமையை நாம் தெளிவாக அவதானிக்கலாம். குறித்த மாணவிகள் இளவயது கற்பம் காரணமாக வைத்தியசாலையில் சிகிட்சை பெற்றுவரும் நிலையில், பாடசாலையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சீர்கேடுகளுக்கு பல்வேறுபட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் தெ.இலங்கை சுற்றுலாப்பயணிகளின் வருகையே முக்கிய காரணமாக சமூகத்தினர் குறிப்பிடுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் தமிழ்ப் பெண்களுக்கேயான தனித்தன்மை போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே, விழித்திடுங்கள்...உங்கள் உறவுகளை சரியான பாதையில் வழிநடாத்துவது உங்கள் கைகளிலேயே உள்ளது....!!!

                                        விழித்திடு......சமுதாயமே....                                                
                                                    விழித்திடு!

1 comments:

Kiruthigan said...

காலத்தின் தேவையான பதிவு

Post a Comment


Online Details

 

dishunters

Copyright 2010 யாழின் விடியல். All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog